|
இதரபக்கங்கள் கவிதைகள்
|
07.Septembe. 2008 வெளிநாட்டு வாழ்கையில் நமது பெண்கள்... ..... (26.08.2008) புலிகள் 6 தடவை மட்டுமே விமானத் தாக்குதல் நடத்தினர் விமானப் படையினர் 6 ஆயிரம் தடவை தாக்கியுள்ளனர் எமது விமானப் படையினர் குறித்த இலக்கை துல்லியமாக அறிந்து தாக்குதல் நடத்துகின்றனர். கிளிநொச்சிகளை கைப்பற்றுவதற்கு நாம் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கை சற்று கடினமானது. எனினும் எப்படியாவது கிளிநொச்சியை கைப்பற்றியே தீருவோம். இது குறித்து கால எல்லையை நிர்ணயிக்க முடியாது.
தேசிய தலைவர் பிரபாகரன் பதுங்குவதற்காக பதுங்கு குழிகள் தேடுகிறார்
"நடக்கும் என்பார் நடந்துவிடும் ஆனால் இதுவரை அப்படி ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை" யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா ஒருபோதும் சிறி லங்காவை கோராது - லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா ஒருபோதும் கோரிக்கை விடுக்காது. விடுதலைப்புலிகள் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுக்கும் கோரிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரினாலும், அதற்கு இந்தியா தலைசாய்க்காது என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். (மேலும்...) த.தே. கூத்தமைபினர் சொல்லும் கதைகளை கேளுங்கோ....!! விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் படையினர் செல்லும் போதுதான் போரின் உண்மையான வடிவத்தை படையினர் எதிர்கொள்வாகள் என தமிழ்த் தேசியக் கூத்தமைப்புமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.சொலமன் சூ சிறில் தெரிவித்துள்ளாருங்கோ. அப்படியானால் இவ்வளவு காலமும் மன்னார் மாவட்டம், வவுனிக்குளம், துணக்காய், மல்லாவி, சிலாவத்துறை போன்ற பிரதேசங்களை இராணுவத்தினர் புலிகளுடன் போராடாமல் சும்மாபோய் கைப்பற்றின மாதிரிதான் இந்த கூத்தமைப்பு கோமாளிகள் சொல்கிறார்கள் இவரின் இந்த கதையிலிருந்து இராணுவத்தினர் கைப்பற்றிய பிரதேசங்களில் புலிகளால் பலிகொடுப்பட்ட வன்னித்தமிழர்களின் உயிர்களும் முக்கியமானவைகள் அல்ல என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். புலித்தலைவர்களை பொறுத்தவரையும், கொழும்பில் வசதியாக வாழும் கூத்தமைபினரை பொறுத்தவரையும் களமுன்னரங்க பகுதிகளில் பலியாகும் அப்பாவிகளின் உயிர்களின் மேல் எந்தவித அக்கறையும் இல்லாதவர்கள் வெளி நாட்டில் வாழும் புலிபினாமிகளும் அதே மனப்பாண்மையில் உள்ளவர்கள்தான். தமிழர்களை அழிக்க பிறந்த இவர்கள் தான் இப்ப தமிழர்கள் என்றாகிவிட்டது. தமிழர்களின் உயிர்கள் வீணாக பலியாகின்றன என நினைத்து கவலையடைபவன் தமிழர்கள் அல்ல அவன் தமிழின துரோகியாகும். தமிழீழ தேசத்தின் அதிபர் பிரபாகரனால் கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய இருமாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் தஞ்சமடைபவர்களின் உயிர்களை பலி எடுப்பதற்கான நடைவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படுகின்றன. கிழி நொச்சியில் இவ்வாறு வெளியேறிவரும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் தரைவழியாகக் கடினமான காட்டுப் பாதைகள் மூலமே வெளியேறிக் கொண்டிருந்தாலும் முல்லைத்தீவில் கடலோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் படகுகள் மூலமும் புலிகளுக்குத் தெரியாமல் தப்பிவந்துள்ளனர். இவ்வாறு கடந்த 20 ஆம் திகதி உயிராபத்தையிட்டு அஞ்சாமல் குருசுமுத்துவின்சன்ற்போல் என்னும் மீனவர் ஒருவர் தனது குடும்பத்தினர், உறவினர் உட்பட ஐந்து பேருடன் இயந்திரப்படகு ஒன்றில் வந்து கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளார பிரபாகரனின் போர் தந்திரோபாயங்களில் ஒன்றான வன்னிமக்களை பலிகொடுக்கும் நிகழ்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு சிறிலங்கா இராணுவத்தினரின் வன்னிமீதான படைநடைவடிக்கைகளை நிறுத்தலாம் என்பதும், அதைவிட சிறிலங்காபடையினரால்தான் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற மாயயை பகுத்தறிவே வளர்சியடையாத புலம்பெயர் புலியாதரவாளர்களுக்கு நாளும் செய்தியாக தெரிவிப்பதன் மூலம் புலிகள் தங்களின் இருப்பையும் தங்களின் போராட்ட பிழைப்பையும் கொண்டு நடத்தலாம் என்பதுவே பிரபாகரனின் போர் தந்திரோபாயங்களில் ஒன்றாகும். பிரபாகரனின் இந்த திட்டமிடலின் பிரகாரம் இந்த செயல்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது 30.08.2008 சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள புதுமுறிப்பு கிராமத்தில் இராணுவத்தினர் இன்று பிற்பகல் 4.40 மணியளவில் மேற்கொண்ட ஆட்லறி ஷெல் வீச்சினால் இரு குழந்தைகள் உட்பட ஐந்து பொது மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தமிழ்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அச் செய்தியில், பலியான காயமடைந்த பொது மக்கள் இராணுவத்தின் அண்மைய நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து வந்தவர்களாவர். ஆபத்தான நிலையில் உள்ள மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளையில் அங்கிருந்து கிடைக்கும் செய்தியில் கருப்பையா ஆனந்தராசா (28 வயது)இ அவரது மகன் ஆன்நதராசா கௌதம் (2 வயது)இ விஸ்வநாதன் திலகேஸ் (20 வயது)இ அவரது 2 மாதக் குழந்தை, அழகேசன் நிலுகா பத்மலதா (28 வயது) ஆகியோரே பலியானவர்கள் ஆவர் எனவும் காயமடைந்த பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி (17 வயது), அழகேஸ்வரன் இயல்விழி (10 மாதம்) சுயநினைவற்ற நிலையில் பெண் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் வாழ்சொந்தங்களே! எங்களை வாழவையுங்கள் நாங்கள் வவுனியா பக்கத்தால தப்பிபோய் அரசகட்டுப்பாட்டு பகுதிகளில் வாழவேண்டும். ஆனால் இந்த அறுந்திருவாங்கள் (புலிகள்) எங்களை எங்கும்போகவும் விடாமல் சாகவும் விடாமல் இங்கே அடைத்து வைத்துக்கொண்டிருக்கிறாங்கள். அவங்களுக்கு கிழிநெச்சிவேண்டுமாம் "அவங்களுக்கு மண்வேண்டும் எங்களுக்கு எங்களின் உயர்வேண்டும்" புலம்பெயர்ந்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் எமது உறவுகளே வவுனியாவிலே எங்களின் வருகையை எதிர்பார்த்து எல்லா ஒழுங்குகளும் செய்து வைத்துக்கொண்டு அரசாங்கம் காத்திருக்கிறது ஆனால் நாங்கள்தான் அங்கு போகமுடியாமல் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் அங்கு தப்பிபோனால் புலிகளை இராணுவத்தினர் வந்து பிடித்துவிடுவார்கள் என்ற பயத்தில் எங்களை மனிதகேடயமாக இங்கே சிறைபிடித்து வைத்திருக்கிறார்கள். மனிதாபிமானமும் மனிதநேயமும் கொண்ட புலம்பெயர் எமது உறவுகளே புலிப்பயங்கரவாதிகளிடமிருந்து எம்மை காப்பாற்றுமாறு உங்களை தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறோம். எங்களுக்கு தேவையான உணவு, மருந்து போன்றவற்றை அரசாங்கம் அனுப்புகின்றது ஆனால் அறுந்திருவாங்கள் (புலிகள்) அதையும் வந்து தட்டிபறித்துக்கொண்டு போறாங்கள். இரப்பிரந்து நாங்கள் அரசிடமிருந்து வாங்கி வைத்ததையே பறித்துக்கொண்டுபோகும் பரதேசிகள் இவங்கள். நாங்கள் படும் துன்பத்தைகூட விலைபேசி உங்களிடம் காசுபறிக்க முற்படுகிறார்கள் எனறு நான் கேள்விப்படுகிறேன். நீங்கள் எங்களின் உயிரை காப்பாற்றுவதற்கு உதவிசெய்யாவிட்டாலும் பறுவாயில்லை எங்களின் இந்த நிலமைக்கு காரணகர்தாக்களான புலிகளுக்காக பணம்சேர்பதற்காக வரும் புலம்பெயர் வாழ் புலிப்பினாமிகளுக்கு காசுகொடுத்து உதவவேண்டாம் எனதாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். வடகிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் பேசும் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லீம் சமூகத்தினருக்கு புலிப்பயங்கரவாதிகளால் இழைக்கப்பட்ட கொடூரங்கள்....
தமிழ் ஆரம்பத்தில் புலம்பெயர் நாடுகளில் கல்யாணவீடு, சாமத்திய வீடு நடந்தால் மணமக்களை அல்லது சாமத்தியபட்ட பெண்ணை விழா நடக்கும் மண்டபத்துக்கு வாடகைக்கு கார் பிடிச்சு கொண்டுபோவாங்கள். பிறகு சொந்தகாரில் கொண்டுபோனாங்கள் இப்ப படிப்படியாக முன்னேறி கடைசியாக சுவிஸ் தலைநகரம் ஒன்றில் நடந்த பூப்புனித நீராட்டுவிழா ஒன்றுக்கு சாமத்திய பட்டபெண்ணை வீட்டிலிருந்து பூப்புனித நீராட்டுவிழா நடக்கும் மண்டபத்துக்கு கெலிகப்டர் மூலம் கொண்டுபோய் இறக்கியிருக்கிறாங்கள். இவர்கள் சுவிஸ் நாட்டில் பெரும் வர்தக நிறுவனங்களை வைத்து நடத்துபவர்கள். இவர்கள் அதீத புலியாதரவாளர்கள் புலிகளுக்கு நிறைய பணத்தை மாதாந்தம் அள்ளிவாரி வழங்குபவர்கள். சுவிஸ்சில் உள்ள அனைத்து வர்தகர்களும் புலிகளுக்கு பணத்தை அள்ளி வாரிவழங்குபவர்கள்தான். இவர்களை போன்ற வர்த்தகர்களால் புலிகளுக்கு கொடுக்கப்படும் பணத்திலிருந்துதான் புலிப்பயங்கரவாதம் பரிணாம வளர்சியடைந்து இவர்களின் பிள்ளைகளை போன்ற சின்னஞ்சிறு சிறுமியர்கள்கூட புலிகளால் களமுனைக்கு அனுப்பி பலிகடவாக்கப்படுகிறார்கள் என்பதோடு வன்னிவாழ் மக்கள் இன்றைய நிலையில் மரநிழலில் ஒருநேர சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திரிகிறார்கள் என்பதையும் இவர்கள் சற்றேனும் சிந்தித்தித்து செயல்பட்டால் நன்றாயிருக்கும். சிந்திப்பதற்கு சிலதுளிகள்!! தமிழீழம் யாருக்கு?? |