முகப்புகட்டுரைகள்படங்கள்தெடர்புகளுக்கு

 இதரபக்கங்கள்

கவிதைகள்
அறிக்கைகள்
நகைசுவைகள்
வாசகர் பக்கம்
கேள்விகள் -பதில்கள் பக்கம்

 


 

 

 

 

 

  

 07.Septembe. 2008

வெளிநாட்டு வாழ்கையில் நமது பெண்கள்... .....  (26.08.2008)
                                                                              எழுதியது கி.பாஸ்கரன்

புலிகள் 6 தடவை மட்டுமே விமானத் தாக்குதல் நடத்தினர் விமானப் படையினர் 6 ஆயிரம் தடவை தாக்கியுள்ளனர்

புலிகள் நடத்திய விமான தாக்குதலில் எந்தவிதமான இராணுவ முக்கியத்துவமோ பாதிப்போ இல்லை. அவர்களை ஆதரிக்கும் சமூகத்தை ஆசுவாசப்படுத்துவதற்காகவே புலிகள் திருகோணமலை துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திவயின சிங்கள பத்திரிகையின் வார வெளியீட்டுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் அளித்த செவ்வியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

புலிகளின் விமானப்படையினர் இதுவரை ஆறு தடவைகள் தாக்குதல்களை நடத்தி உள்ளனர். எமது விமானப் படையினரோ இக்காலக் கட்டத்தில் ஆறாயிரம் தடவைகள் விமான தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.

அவர்களின் விமானங்களில் முப்பது கிலோ எடை உள்ள குண்டை மாத்திரமே கொண்டு செல்ல முடியும். எமது விமானங்களில் 250 கிலோ முதல் ஆயிரம் கிலோ எடை உடைய குண்டுகளை இலகுவாக கொண்டு செல்ல முடியும். புலிகள் இலக்கு தவறியே குண்டுகளை போடுகின்றனர்.

எமது விமானப் படையினர் குறித்த இலக்கை துல்லியமாக அறிந்து தாக்குதல் நடத்துகின்றனர். கிளிநொச்சிகளை கைப்பற்றுவதற்கு நாம் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கை சற்று கடினமானது. எனினும் எப்படியாவது கிளிநொச்சியை கைப்பற்றியே தீருவோம். இது குறித்து கால எல்லையை நிர்ணயிக்க முடியாது.

குறித்த இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. எமது முதல் குறிக்கோளாக இருந்தது புலிகளின் வளங்களை அழிக்க வேண்டும் என்பதாகும். மன்னாரில் இருந்து ஆரம்பமான அவர்களின் வளங்களையே அழித்து வந்தோம். கடற்புலிகளின் வளங்களை எமது கடற்படையினர் வெற்றிகரமாக அழித்தனர். அத்துடன் அவர்கள் ஆயுதங்களை கொண்டு வந்த பாதைகளை தடை செய்தோம். அவ்வாறான சில இடங்கள் இன்னும் இருப்பதை நாம் அறிவோம்.

யுத்தத்தினால் கிளிநொச்சியில் உள்ள மக்களுக்கு உயிராபத்து ஏற்படாது. யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் போது அங்கு சுமார் ஐந்து இலட்சம் மக்கள் இருந்தனர். யாழ். குடாநாட்டை கைப்பற்றிய பின்னர் ஒன்றரை வருட காலத்திற்குள் அவர்களை மீள குடியமர்த்தினோம். கிளிநொச்சியை பொறுத்தமட்டில் யாழ். குடாநாட்டில் இருந்த மக்களை விட அரைவாசி பேரே அப்பகுதியில் உள்ளனர் என்றா


தலைவர் உள்ளுக்க விட்டு அடிப்பார் என்று புலம்பும் புலியாதரவாளர்கள் சிறீலங்கா ஆழ ஊடுருவும் படையணியினர் உள்ளுக்க போய் தாக்குதல்கள் செய்கிறார்களே  அதையிட்டு என்னசொல்ல விரும்புகிறார்கள்??

(06.09.2008 சனிக்கிழமை) வவுனியா வடக்கு பகுதியில் ஆழஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளேமோர் தாக்குதலில் பொதுமகன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அனந்தர் புளியங்குளத்துக்கும், நெடுங்கேணிக்கும் இடையில் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம் மீதே இந்த கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் ஸ்ரீநிவாசன் (வயது 48) என்பவரே படுகாயமடைந்தவராவார்
 
...

புலிகள் அக்கராயன் வன்னேரிக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்னேறும் முன்நகர்வு நடவடிக்கையை முறியடித்து 50க்கு மேற்பட்ட படையினரை முறித்துக்கொன்றார்களாம், கிழிநொச்சி நாச்சிகுடாவில் முன்னேறிய படையினரை முறியடித்து 45பேருக்கு மேற்பட்டோரை கொன்றார்களாம், 50பேருக்கு மேற்பட்டோருக்கு காயங்களையும் உண்டாக்கினார்களாம்,  பிறகு அங்கால துணுக்காய் ஆலங்குளம், வவுனியா, குங்சுக்குளம், பாலமோட்டை, மணலாறு போன்ற முன்ரங்க பகுதிகளிலும் சிறிலங்காவின் படையினரின் மும்முனை தாக்குதல்களை நாளாந்தம் புலிகள் முறியடித்து தாக்கி பல படையினரை கொல்வதாக பெருதொகையில் கணக்குகாட்டி அவர்களின் புதின ஊடகங்களில் பிரசுரிக்கிறார்கள். 
(மேலும்....)

 தேசிய தலைவர் பிரபாகரன் பதுங்குவதற்காக பதுங்கு குழிகள் தேடுகிறார்

பிரபாகரன்-  ஐயோ! ஐயோ! ஒருகால் அங்கால எட்டி பார்பிள்ளை! எதோ விமான வாற சத்தம் ஒன்றுகேட்குது நான் நினைக்கிறன் குண்டுபோடுகின்ற விமானத்தின்ர சத்தம் போலதான் எனக்கு கேட்கிறது. நான் உன்ர பிள்ளைகளுடன் பதுங்குகுழிகுள் பதுங்கிகிடக்கிறன் நீ ஒருக்கால் கொஞ்சம் வெளியில போய் எட்டிபார்த்திற்று வாறயா பிள்ள எனக்கென்றால் சரியான பயமாககிடக்குது.

பிள்ளைகளின் தாய்-
  நான் என்ர பிள்ளைகளை உங்களோடு விட்டுவிட்டு போக மாட்டன் நீங்க வேணும் என்றால் வேற பதுங்குகுழிக்குள் போய் பதுங்கி கொள்ளுங்கள். என்ர பிள்ளைகள் ஏற்கனவே உங்களை கண்டு பயந்து போய்கிடக்குதுகள். நான் குடுக்கும் தண்ணீரைகூட வேண்டி குடிக்கமாட்டன் என்று சொல்லுதுகள்.   (மேலும்.)

"நடக்கும் என்பார் நடந்துவிடும் ஆனால் இதுவரை அப்படி ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை"

 தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட அந்த இயக்கத்தின் தலைவர்கள் இராணுவத்தினரிடம் பிடிபடாமல் விடுதலைப்புலிகளின் இலகுரக விமானங்களை பயன்படுத்தி இந்த நாட்டைவிட்டு தப்பி செல்ல எத்தனிக்கலாம், அந்த வேளையில் மேற்படி விமானங்களை அழிப்பதற்கும் தயாராகவே இராணுவத்தினர் உள்ளதாக சிறிலங்கா இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணக்கார தெரிவித்துள்ளாருங்கோ.
 

ஒவ்வொரு தடவையும் விடுதலைப்புலிகளின் விமானங்கள் இலங்கையின் கேந்திரம் முக்கியம் வாய்ந்த இடங்களுக்கு போய் குண்டை வீசிவிட்டு போனபின்பு இராணுவதரப்பினர் இப்படிதான் சொல்லுகிறார்கள். எனிமேல் சிறிலங்கா வான்பரப்பில் புலிகளின் விமானங்களை பறக்கவிடமாட்டோம் என்பார்கள்.
ஆனால் புலிகளின் விமானங்கள் ஏழாவது தடைவையாக தங்களின் விமானத்தாக்குதல்களை நடத்திவிட்டார்கள். கடைசியாக திருகோணமலையில் உள்ள கடற்படை துறைமுகத்திலும் குண்டை கொண்டுபோய் வீசிவிட்டு வன்னிக்கிடங்குக்குள் பத்திரமாக போய் புகுந்துகொண்டார்கள்.   (மேலும்....)

 யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா ஒருபோதும் சிறி லங்காவை கோராது - லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன

 விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா ஒருபோதும் கோரிக்கை விடுக்காது. விடுதலைப்புலிகள் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  விடுக்கும் கோரிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரினாலும், அதற்கு இந்தியா தலைசாய்க்காது என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.  (மேலும்...)

 த.தே. கூத்தமைபினர் சொல்லும் கதைகளை கேளுங்கோ....!!

விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் படையினர் செல்லும் போதுதான் போரின் உண்மையான வடிவத்தை படையினர் எதிர்கொள்வாகள் என தமிழ்த் தேசியக் கூத்தமைப்புமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.சொலமன் சூ சிறில் தெரிவித்துள்ளாருங்கோ.

அப்ப இவ்வளவு நாளும் யாருடைய பகுதிக்குள் படையினர் போய்கொண்டிருக்கிறார்கள்? எலிகளின் பகுதிக்குள் போய் கொண்டிருக்கிறார்களோ? படையினர் எனித்தான் புலிகளின் பகுதிக்குள் போகபோகிறார்கள் போல்தெரிகிறது. மன்னார் மாவட்டம் முழுமையாக புலிகளின் கையில் இருந்து பிடிக்கப்பட்டு இப்பொழுது முல்லைதீவு மாவட்டத்துக்குள் துணுக்காய், மல்லாவிவரை படையினர் போய்விட்டார்கள் எனி மாங்குளத்தை கைப்பற்றின பின்பும் இதே கதையைதான் கூறப்போகிறார்கள் புலி பாராளுமன்ற கூத்தமைப்பினர்.
அரசு இதுவரை கைப்பற்றிய பகுதிகளாகக் கூறப்படுபவைகள் தங்களை பொறுத்த மட்டில் தேவையற்ற பகுதிகளாகுமாம். விடுதலைப்புலிகள் இருக்கின்ற பகுதிக்கு படையினர் செல்வார்களாயின் உண்மையான போரின் வடிவத்தை சந்திப்பார்கள் என்றும் எம்.பி.சொலமன் சூ சிறில் மேலும் கருத்து தெரிவித்துள்ளாருங்கோ.

புலிகள் தோல்வியடைந்து வருக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தாங்கள் விட்டுவெளியேறுகின்ற பிரதேசங்களிலிருந்து தந்திரோபாயமாக விலகிசென்றதாக சொல்லுவார்கள் அல்லது அந்த பிரதேசங்கள் முக்கியம் வாய்ந்த பிரதேசங்கள் அல்ல என்று சொல்வார்கள் இது அவர்களின் வழமையான பதில்களாகும்

அப்படியானால் இவ்வளவு காலமும் மன்னார் மாவட்டம், வவுனிக்குளம், துணக்காய், மல்லாவி, சிலாவத்துறை போன்ற பிரதேசங்களை இராணுவத்தினர் புலிகளுடன் போராடாமல் சும்மாபோய் கைப்பற்றின மாதிரிதான் இந்த கூத்தமைப்பு கோமாளிகள் சொல்கிறார்கள் இவரின் இந்த கதையிலிருந்து இராணுவத்தினர் கைப்பற்றிய பிரதேசங்களில் புலிகளால் பலிகொடுப்பட்ட வன்னித்தமிழர்களின் உயிர்களும் முக்கியமானவைகள் அல்ல என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். புலித்தலைவர்களை பொறுத்தவரையும், கொழும்பில் வசதியாக வாழும் கூத்தமைபினரை பொறுத்தவரையும் களமுன்னரங்க பகுதிகளில் பலியாகும் அப்பாவிகளின் உயிர்களின் மேல் எந்தவித அக்கறையும் இல்லாதவர்கள் வெளி நாட்டில் வாழும் புலிபினாமிகளும் அதே மனப்பாண்மையில் உள்ளவர்கள்தான். தமிழர்களை அழிக்க பிறந்த இவர்கள் தான் இப்ப தமிழர்கள் என்றாகிவிட்டது. தமிழர்களின் உயிர்கள் வீணாக பலியாகின்றன என நினைத்து கவலையடைபவன் தமிழர்கள் அல்ல அவன் தமிழின துரோகியாகும்.
 
விடுதலைப்புலிகளின் 20 சடலங்கள் ஐ.சி.ஆர்.சியிடம் ஒப்படைப்பு.

நேற்று மாலை 20 விடுதலைப்புலிகலின் சடலங்களை படையினர் ஐ.சி.ஆர்.சியிடம் ஒப்படைத்துள்ளதுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இச் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், இதில் 12 சடலங்கள் வெலிஓயா பதவிய பகுதியில் கண்டெடுக்கப்பாவை எனவும்,   5பாலமோட்டை வவுனியாபகுதியில் கண்டெடுக்கப்பட்டவை எனவும் மேலும் 2 சடலங்கள் திருகோணமலை மற்றும் மல்லாவி பகுதியில் கண்டெடுக்கப்பட்டைவை என பாதுகாப்பு அமைச்சகம் மேலும்ம் தெரிவித்துள்ளது.

புலிகள் இயக்கத்திலிருந்து விலகிய 5000 பேரை உடன் இணையுமாறு கோரிக்கை.


புலிகள் இயக்கப் படையில் நீண்ட காலம் உறுப்பினராக இருந்து பின்னர் அனுமதி பெற்று விலகிச் சென்றவர்களை உடனடியாக மீண்டும் இயக்கத்தில் வந்து சேர்ந்து கொள்ளும்படி புலிகள் இயக்கத் தலைமைத்துவம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விலகிச் சென்றோரில் பெரும்பகுதியினர் பின்னர் திருமணம் செய்து மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வருவதுடன் ஏனையோர் தமது பெற்றோர் அல்லது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் குறிப்பிட்ட தொகையினர் புலிகளின் பிரதேசங்களிலிருந்து தப்பியோடியுள்ளதுடன் ஒரு பகுதியினர் புலிகள் இயக்கம் நடத்திவரும் நிலையங்கள் நிறுவனங்களில் தொழில் செய்து வருகின்றனர். 
(மேலும்...)

தமிழீழ தேசத்தின் அதிபர் பிரபாகரனால் கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய இருமாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் தஞ்சமடைபவர்களின் உயிர்களை பலி எடுப்பதற்கான நடைவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால் அன்னிய சிறிலங்கா அரச ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷசவின் ஆலோசனைக்கு அமைவாக கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய இருமாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் தஞ்சமடைபவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படுகின்றன. 


முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அவ்விரு மாவட்டங்களிலிருந்தும் இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு தேவையாக சகல உதவிகளையும் அரசாங்கம் துரிதகதியில் செய்துவருகின்றது மோதல்களின் போது உணவு, மருந்து பொருட்களை அரசாங்கம் ஆயுதமாக பயன்படுத்தாது என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பீ. திவாரத்ன தெரிவித்தார்.   (
மேலும்...)

முல்லைத்தீவிலிருந்து கடல் வழியாக புலிகளிடமிருந்து தப்பிவந்து கடற்படையினரிடம் சரணடைந்த மீனவர் குடும்பம்.

கிழி நொச்சியில் இவ்வாறு வெளியேறிவரும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் தரைவழியாகக் கடினமான காட்டுப் பாதைகள் மூலமே வெளியேறிக் கொண்டிருந்தாலும் முல்லைத்தீவில் கடலோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் படகுகள் மூலமும் புலிகளுக்குத் தெரியாமல் தப்பிவந்துள்ளனர். இவ்வாறு கடந்த 20 ஆம் திகதி உயிராபத்தையிட்டு அஞ்சாமல் குருசுமுத்துவின்சன்ற்போல் என்னும் மீனவர் ஒருவர் தனது குடும்பத்தினர், உறவினர் உட்பட ஐந்து பேருடன் இயந்திரப்படகு ஒன்றில் வந்து கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளார
 

 
மேலும்.....

பிரபாகரனின் போர் தந்திரோபாயங்களில் ஒன்றான வன்னிமக்களை பலிகொடுக்கும் நிகழ்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிழிநொச்சியில் இடம்பெயர்ந்து வாழும் பிரதேசங்களில் மீது சிறிலங்கா படையினர்கள் ஏவும் ஏவுகணைகள் ஆட்டுலெறிகள் போன்றன வீழ்ந்து வெடித்து அதனால் அங்குவாழும் மக்கள் பலபேர் காயப்படவேண்டும், காவுகொள்ளப்படவேண்டும். இதுதான் எங்களுடைய தேசியதலைவரின் போர் தந்திரோபாயங்களில் ஒன்றாகும். அப்படி நடக்கும் பட்சத்தில் அதை படம்பிடித்து  வெளிநாடுகளில் உள்ள புலியாதரவாளர்களிடம் (விசுக்கோத்துகள்) காட்டுவதன் மூலம் தமிழர்களை சிங்கள இராணுவத்தினர்தான் கொலைசெய்கிறார்கள் என்று அவர்களிடமிருந்த ஓர் அனுதாபத்தைபெற்று அதன் மூலம் பணத்தை சம்பாதிக்கலாம்.

அத்தோடு சிறிலங்கா இராணுவத்தினரின் வன்னிமீதான படைநடைவடிக்கைகளை நிறுத்தலாம் என்பதும், அதைவிட சிறிலங்காபடையினரால்தான் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற மாயயை பகுத்தறிவே வளர்சியடையாத புலம்பெயர் புலியாதரவாளர்களுக்கு நாளும் செய்தியாக தெரிவிப்பதன் மூலம் புலிகள் தங்களின் இருப்பையும் தங்களின் போராட்ட பிழைப்பையும் கொண்டு நடத்தலாம் என்பதுவே பிரபாகரனின் போர் தந்திரோபாயங்களில் ஒன்றாகும்.

பிரபாகரனின் இந்த திட்டமிடலின் பிரகாரம் இந்த செயல்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது 30.08.2008 சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள புதுமுறிப்பு கிராமத்தில் இராணுவத்தினர் இன்று பிற்பகல் 4.40 மணியளவில் மேற்கொண்ட ஆட்லறி ஷெல் வீச்சினால் இரு குழந்தைகள் உட்பட ஐந்து பொது மக்கள் பலியாகியுள்ளனர்.

மேலும் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தமிழ்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அச் செய்தியில், பலியான காயமடைந்த பொது மக்கள் இராணுவத்தின் அண்மைய நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து வந்தவர்களாவர். ஆபத்தான நிலையில் உள்ள மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளையில் அங்கிருந்து கிடைக்கும் செய்தியில் கருப்பையா ஆனந்தராசா (28 வயது) அவரது மகன் ஆன்நதராசா கௌதம் (2 வயது) விஸ்வநாதன் திலகேஸ் (20 வயது) அவரது 2 மாதக் குழந்தை, அழகேசன் நிலுகா பத்மலதா (28 வயது) ஆகியோரே பலியானவர்கள் ஆவர் எனவும் காயமடைந்த பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி (17 வயது), அழகேஸ்வரன் இயல்விழி (10 மாதம்) சுயநினைவற்ற நிலையில் பெண் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரபாகரனுக்கு இந்தசெய்தியானது மிகவும் சநந்தோசத்தை கொடுத்திருக்கும் என நம்பலாம்.

புலம்பெயர் நமது சொந்தங்களே!!

புலம்பெயர் அடியார்களே நான் பசியாக இருக்கிறேன் என்று சொல்லி உங்களிடம் புலிகள் பணம்பறிக்கும் வேலையில் இறங்கியுள்ளதாக நான்கேள்விப்படுகிறேன். இவங்களின் கதையை நம்பி நீங்கள் ஏமாறாதீர்கள். இப்படிதான் முல்லைதீவில் சுனாமி எங்களை சூழ்ந்துகொண்டபோது அங்கே புலம்பெயர் நாடுகளில் வாழும் உங்களிடம் பல சுத்துமாத்து கதைகள் சொல்லி நிறைய பணம் சேர்த்தார்கள் என்பதை நான் பிறக்க முதலே அறிந்துகொண்டேன்.

புலம்பெயர் வாழ்சொந்தங்களே! எங்களை வாழவையுங்கள் நாங்கள் வவுனியா பக்கத்தால தப்பிபோய் அரசகட்டுப்பாட்டு பகுதிகளில் வாழவேண்டும். ஆனால் இந்த அறுந்திருவாங்கள் (புலிகள்) எங்களை எங்கும்போகவும் விடாமல் சாகவும் விடாமல் இங்கே அடைத்து வைத்துக்கொண்டிருக்கிறாங்கள். அவங்களுக்கு கிழிநெச்சிவேண்டுமாம் "அவங்களுக்கு மண்வேண்டும் எங்களுக்கு எங்களின் உயர்வேண்டும்" புலம்பெயர்ந்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் எமது உறவுகளே வவுனியாவிலே எங்களின் வருகையை எதிர்பார்த்து எல்லா ஒழுங்குகளும் செய்து வைத்துக்கொண்டு அரசாங்கம் காத்திருக்கிறது ஆனால் நாங்கள்தான் அங்கு போகமுடியாமல் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறோம்.

நாங்கள் அங்கு தப்பிபோனால் புலிகளை இராணுவத்தினர் வந்து பிடித்துவிடுவார்கள் என்ற பயத்தில் எங்களை மனிதகேடயமாக இங்கே சிறைபிடித்து வைத்திருக்கிறார்கள். மனிதாபிமானமும் மனிதநேயமும் கொண்ட புலம்பெயர் எமது உறவுகளே புலிப்பயங்கரவாதிகளிடமிருந்து எம்மை காப்பாற்றுமாறு உங்களை தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறோம்.

எங்களுக்கு தேவையான உணவு, மருந்து போன்றவற்றை அரசாங்கம் அனுப்புகின்றது ஆனால் அறுந்திருவாங்கள் (புலிகள்) அதையும் வந்து தட்டிபறித்துக்கொண்டு போறாங்கள்.  இரப்பிரந்து நாங்கள் அரசிடமிருந்து வாங்கி வைத்ததையே பறித்துக்கொண்டுபோகும் பரதேசிகள் இவங்கள். நாங்கள் படும் துன்பத்தைகூட விலைபேசி உங்களிடம் காசுபறிக்க முற்படுகிறார்கள் எனறு நான் கேள்விப்படுகிறேன். நீங்கள் எங்களின் உயிரை காப்பாற்றுவதற்கு உதவிசெய்யாவிட்டாலும் பறுவாயில்லை எங்களின் இந்த நிலமைக்கு காரணகர்தாக்களான புலிகளுக்காக பணம்சேர்பதற்காக வரும் புலம்பெயர் வாழ் புலிப்பினாமிகளுக்கு காசுகொடுத்து உதவவேண்டாம் எனதாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வடகிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் பேசும் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லீம் சமூகத்தினருக்கு புலிப்பயங்கரவாதிகளால் இழைக்கப்பட்ட கொடூரங்கள்....

தமிழ் பேசும் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லீம் சமூகத்தினருக்கு 1990 ஆண்டு ஆகஸ்ட் என்பது மறக்கமுடியாத ஆண்டாகும். அவர்களின் பாரம்பரிய தாயக பிரதேசங்களான வடகிழக்கிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டு, பலபயங்கர படுகொலைகளை முஸ்லீம் மக்களுக்கு எதிராக புலிகள் செய்யப்பட்ட ஆண்டாகும்.                      இந்த ஆண்டோடு பதினெட்டு ஆண்டுகள்
 மேலும்......

வெளிநாட்டில் நடக்குதைய்யா நம்மவரின் கூத்து!!

வெளிநாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் முன்னேறிக்கொண்டு போயிற்றாங்கள் அமெரிக்கன் செய்வாய் கண்டத்துக்கு போய் இறங்கிற மாதிரி நம்மடைய ஆக்களும் எங்கோகோயோ போய் இறங்கீற்றாங்கள்  நல்லமுன்னேற்றம்தான்.

தமிழ்  ஆரம்பத்தில் புலம்பெயர் நாடுகளில் கல்யாணவீடு, சாமத்திய வீடு நடந்தால் மணமக்களை அல்லது சாமத்தியபட்ட பெண்ணை விழா நடக்கும் மண்டபத்துக்கு வாடகைக்கு கார் பிடிச்சு கொண்டுபோவாங்கள். பிறகு சொந்தகாரில் கொண்டுபோனாங்கள் இப்ப படிப்படியாக முன்னேறி கடைசியாக சுவிஸ் தலைநகரம் ஒன்றில் நடந்த பூப்புனித நீராட்டுவிழா ஒன்றுக்கு சாமத்திய பட்டபெண்ணை வீட்டிலிருந்து பூப்புனித நீராட்டுவிழா நடக்கும் மண்டபத்துக்கு கெலிகப்டர் மூலம் கொண்டுபோய் இறக்கியிருக்கிறாங்கள்.

இவர்கள் சுவிஸ் நாட்டில் பெரும் வர்தக நிறுவனங்களை வைத்து நடத்துபவர்கள். இவர்கள் அதீத புலியாதரவாளர்கள் புலிகளுக்கு நிறைய பணத்தை மாதாந்தம் அள்ளிவாரி வழங்குபவர்கள். சுவிஸ்சில் உள்ள அனைத்து வர்தகர்களும் புலிகளுக்கு பணத்தை அள்ளி வாரிவழங்குபவர்கள்தான். இவர்களை  போன்ற வர்த்தகர்களால் புலிகளுக்கு கொடுக்கப்படும் பணத்திலிருந்துதான் புலிப்பயங்கரவாதம் பரிணாம வளர்சியடைந்து இவர்களின் பிள்ளைகளை போன்ற சின்னஞ்சிறு சிறுமியர்கள்கூட புலிகளால் களமுனைக்கு அனுப்பி பலிகடவாக்கப்படுகிறார்கள் என்பதோடு வன்னிவாழ் மக்கள் இன்றைய நிலையில் மரநிழலில் ஒருநேர சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திரிகிறார்கள் என்பதையும் இவர்கள் சற்றேனும் சிந்தித்தித்து செயல்பட்டால் நன்றாயிருக்கும்.

சிந்திப்பதற்கு சிலதுளிகள்!!

 மனம் ஊனமாகிறது இந்த மானிடர்களை எண்ணுகையில்...
மனிதப்பிறப்பு என்பது அரிதான பிறப்பாகும் அதைதான் அவ்வையார் அழகாக சொல்கிறார் "அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது அதிலும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறப்பதரிது" என்கிறார். ஒரு கணம் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ஒரு மனிதனின் உயிரை காப்பாற்றுவதற்காக அல்லது ஒரு மனிதனின் ஒவ்வொரு அங்க, அவயவங்களையும் காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் எவ்வளவு கஸ்ரப்படுகிறார்கள்

குருடனாக
இருப்பவன் தனக்கு கண்ணிருந்தால் இந்த உலகத்தை பார்கலாமே என்று எண்ணுகின்றான், கால் ஊனமானவன் தனக்கு கால்கள் இருந்தால் மற்றைய மனிதர்கள்போல் நடக்கலாம், ஓடலாம் என்று நினைப்பான். இப்படியாக ஊனமாக பிறப்பவர்கள் ஒவ்வெருவரும் தாங்கள் முழுமையான மனிதர்களாக பிறக்கவில்லையே என்று அவர்களுடைய வாழ்நாள் முழவதும் கவலைகொள்வார்கள்.

ஆனால் பாருங்கோ வன்னியில் இரண்டு பிரகிருதிகள் இருக்கிறாங்கள். பிரபாகரன் என்று ஒருத்தனும் பொட்டு அம்மன் என்று ஒருவனும் இந்த உலகத்தில் பிறந்திருக்கிறாங்கள் அவங்கள் முழுமையாக எந்தவித ஊனமும் இன்றி பிறந்த எங்களுடைய பிஞ்சு சிறார்களை குண்டுகட்டி அவர்களின் அங்க அவயவங்களை சிதறடிக்கிறார்கள், அதைவிட கொடுமை எத்தனையோ பிள்ளைகளை அங்கவீனர்களாக்கி வன்னிக்குள் முடக்கிவைத்திருக்கிறார்கள்.

தமிழீழம் யாருக்கு??

வெளிநாடுகளில்
தமிழீழம் கேக்கிறவங்கள் அவங்கள் இருக்கும் அந்தந்த நாடுகளில் குடியுரிமையை