முகப்புகட்டுரைகள்படங்கள்தெடர்புகளுக்கு

 இதரபக்கங்கள்

கவிதைகள்
அறிக்கைகள்
நகைசுவைகள்
வாசகர் பக்கம்
கேள்விகள் -பதில்கள் பக்கம்

 

 


 

 

 

 

 

 

03.06.09.வெள்ளிக்கிழமை.

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு:  இடதுசாரிகளை வீழ்த்திய இனவாதம் (பகுதி-15)
பாவை சந்திரன்.
04.07.09.

லங்கா சமசமாஜக் கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை உக்கிரப்படுத்தியதன் விளைவாக என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா, பிலிப் குணவர்த்தனா, லெஸ்லி குணவர்த்தனா, விக்ரமசிங்க போன்றவர்கள் ஆங்கிலேயரால் சிறைப்படுத்தப்பட்டனர். அன்றைய நிலையில் சிறையை உடைத்து வல்வெட்டித்துறை வழியாகத் தோணிகளில் இவர்கள் இந்தியாவுக்கு வந்து தஞ்சம் அடைந்தனர்.

 இவர்கள் இந்தியப் பெயர்களை ஏற்று கல்கத்தா, பம்பாய், சென்னை நகரங்களில் தலைமறைவாகத் தொழிற்சங்க, அரசியல் வேலைகளில் ஈடுபட்டனர். இதன் விளைவாக இலங்கை இடதுசாரி, இந்திய இடதுசாரி இயக்கங்களுக்கிடையில் நெருங்கிய தொடர்புகள் வளர்ந்தன. பிலிப் குணவர்த்தனா இந்தியப் பற்றின் விளைவாக, தனது இரண்டாவது மகனுக்கு இண்டிகா குணவர்த்தனா என்று பெயரிட்டு அழைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். (மேலும்)


வடமாகாண கல்வி மேம்பாட்டுக்கு உலக வங்கி ரூ.200 மில்லியன் உதவி.
 
உயர்கல்வி அமைச்சர் உலக வங்கி பிரதிநிதிகள் பேச்சில் இணக்கம்
 03.07.09.

*யாழ். பல்கலைக்கு ரூ. 40 மில்லியன் 
* வவுனியாவில் தொ. நு. நிறுவனம் அமைக்க 65 மில்லியன் ரூபா  வட மாகாணத்தின் உயர் கல்வி மேம்பாட்டுக்கென 200 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக உயர் கல்வி அமைச்சர் விஸவ வர்ண பால தெரிவித்தார்
.(மேலும்)

புலிப் பூச்சாண்டி!!    - அறிவுடன்
03.07.09

நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும் என்றார்கள் எந்த நாளை என்று இறுதி வரை அவர்களும் சொல்லவில்லை, அதை நம்பப் பண்ணியே அப்பாவி மக்களிடம் கிட்டத்தட்ட 11000 நாட்கள் சோறும், நீரும், இரத்தமும், சதையும், கள்ளும்,புல்லும் அவர் வீட்டுக் கதவு, ஜன்னல், கூரைகளையும் பிடுங்கித் தின்று ஏப்பம் விட்டு இப்போது நீட்டப்பட்டிருக்கும் இராணுவத் துப்பாக்கிகள் முன், மூடப்பட்டிருக்கும் வேலி முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்

இனிமேலும் அவர்களிடம் போய் தமிழீழம் எனும் புலியின் பூச்சாண்டியைக் காட்ட முனைந்தால் அது மக்கள் சக்தியாலேயே முறியடுக்கப்படும் என்பது புலிப் பூச்சாண்டி வீரர்கள் நன்கறிந்த விடயம். 
(மேலும்)

ஈரானிய நெருக்கடியில் உள்ள சர்வதேச பிரச்சினைகள்.
03.07.09

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று வியாழக் கிழமை நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளுக்கான சர்வகட்சி குழுவின் முதலாவது கூட்டத்தில் வடக்கில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் விரைவில் அவரவரது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டுமென்பதே தமிழ்க் கட்சிகளின் பொதுவான வலியுறுத்தலாக இருந்துள்ளது... (மேலும்)

வெள்ளைதோல், கருப்பு மனிதன்.     -அறிவுடன்.
28.006.09.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு நிச்சயம், ஆனால் இறந்தும் மனிதர் மனங்களில் வாழ்வது அவனவன் செய்த பாக்கியம். இன்று உலகம் ஒரு வெள்ளைத் தோல் போர்த்தியிருந்த கருப்பு மனிதனின் மரணச் சோகத்தை தனதாக்கிக்கொண்டுள்ளது.

வெறும் பாடகன், ஒரு மேடை நாட்டியக்காரன் என்கிற நிலை தாண்டி உலகின் எந்த மூலையில் இருக்கும் சாதாரண மனிதனுக்கும் அவன் நன்கு பரிட்சயமான பெயராக இருந்த நிலையில் மரணித்துள்ளான். மைக்கேல் ஜாக்சன் என்று உலகறிந்த பாடகன் தனது 50 வது வயதில் மார்படைப்பில் இறப்படைந்த செய்தி பரவியதும் ஏறத்தாழ முழு உலகமும் அதுதான் “தலைப்புச் செய்தி”  ஆகிவிட்டது... (மேலும்)

அரச பணிகளில் தமிழ்மொழி கட்டாயமாகின்றது : டியூ. குணசேகர.
27.06.09.  
 
அரச பணிகளில் தமிழ்மொழி கட்டாய மொழியாவதாக அரசியல் சாசன அமைச்சர் டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார். 
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்...

எதிர்வரும் காலங்களில் அரச பணிகளில் இணைந்து கொள்ளும் அனைவரும் தமிழ் மொழியில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
தமிழ் மொழியில் சித்தியடையாதோர் அரச பணிகளுக்கு அமர்த்தப்பட மாட்டார்கள். அரசசேவையில் உள்ளவர்களுக்குத் தமிழ்மொழி கற்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச காரியாலயங்களில் சிறுபான்மை மக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது" என்றார்

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு: அரசியல் கட்சிகளின் தோற்றம்!   -
(பகுதி-14)
27.06.09.
இலங்கையின் முதலாவது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக 1935-இல் லங்கா சமசமாஜக்கட்சி உருவெடுக்கிறது. இந்தக் கட்சியின் தோற்றமானது தொழிலாளர் இயக்கத்திலிருந்து தொடங்குகிறது. இலங்கையில் 1860-இல் முதல் தொழிலாளர் போராட்டம் நடந்தபோதிலும் 1899-இல் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம் உருவாகி அதன் விளைவாகத் தொழிற்சங்கக் கட்டமைப்பு வெளிப்பட்டபோதிலும் 1920-இன் காலத்தில்தான் இரண்டு விரிவான தொழிலாளர் அமைப்புகளைப் பார்க்க முடிகிறது.

பிரபல பத்திரிகையாளர் கே. நடேசய்யர் தலைமையில் உருவான இலங்கை இந்தியத் தொழிலாளர் சம்மேளனமும் ((Ceylon Indian Workers Federation) ஏ.ஈ. குணசிங்கா தலைமையில் உருவான தொழிலாளர் சங்கமும்தான் அந்தக் குறிப்பிடத்தக்க அமைப்புகள்.. (மேலும்) 

கேப்டன் "கருணாநிதி"    -  அறிவுடன்.
27.06.09.
தமிழீழம் என்று ஒரு தேசம் அமைய வேண்டுமாக இருந்தால் முதலில் அண்டை நாடும் அதற்கடுத்ததாக தாம் சார்ந்த பிராந்தியம் முதல் உலகின் பல்வேறு சக்திகளின் அனுசரணை இல்லாவிடினும் விருப்பம், ஆதரவும் இருந்தால் மட்டுமே முடியும் என்பது புலி ஆதரவாளர்கள் தவிர்ந்த சிறு பிள்ளைகளுக்கும் தெரிந்த விடயம்.

அப்படி அமைய வேண்டுமானால் தம்மைப் போராட வைக்கும் சித்தார்ந்தம் தெளிவானதாகவும், அதனடிப்படையில் தாம் செய்யும் செயல்கள், எடுக்கும் நடவடிக்கைகள், போரிடும் முறைகள், தாக்குதல் வகைகள் என அனைத்தும் தமது உளத் தூய்மையான போராட்டத்தை வெளியுலகிற்கு கொண்டு செல்வதாக இருந்திருக்க வேண்டும் ..(மேலும்)

இன்றைய ஆட்சி விரைவில் கவுழுமென கூறிய பிரபல சோதிடர் நான்காம் மாடியில் தடுத்துவைப்பு-    ஐ.தே.க., எம்.பி. தயாசிறி ஜயசேகர.
26.06.09.

பிரபாகரனுக்கு பில்லி சூனியம் வைத்து தாமே கொலை செய்ததாகவும் மகிந்த ராஜபக்ஷவின் அரசு விரைவில் கவிழுமெனவும் அரச தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் கூறிய பிரபல சோதிடரொருவர் தற்போது நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஐ.தே.க.,எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

சோதிடர் ஒருவர் தனது கருத்தைக் கூறியதற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை இலங்கை வரலாற்றில் மகிந்த ராஜபக்ஷ அரசில் தான் முதன் முதலில் நடந்துள்ளது.   இந்த நாட்டில் சோதிடர்களுக்குக் கூட தமது கருத்தைக் கூற உரிமையில்லை..(மேலும்)

பாகிஸ்தான் இராணுவம் தலிபான் மோதல்கள் நிழலா? நிஜமா? -குப்பன்.
26.06.09.

வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கைவைக்க முயன்ற பத்மாசுரன் பற்றிய இந்து மதப் புராணக்கதையை அறியாதவர்கள் இருக்க முடியாது. பாகிஸ்தானின் இன்றைய நிலை அப்புராணக் கதையைத்தான் நினைவுபடுத்துகிறது. அந்நாட்டிலுள்ள வடமேற்கு எல்லைப்புற மாநிலத்திலுள்ள மாலாகண்ட் பகுதியில் ""அமைதியை' ஏற்படுத்த, அப்பகுதியில் செயல்பட்டுவரும் தெஹ்ரிக் இநிபாஸ் ஹரியத் இ முஹமதி என்ற இஸ்லாமியத் தீவிரவாத அமைப்போடு பாகிஸ்தான் அரசு ஓர் உடன்பாடு செய்துகொண்டது. இதன்படி.. (மேலும்)

திருவில்லிபுத்தூர் திருவிழாவில் கொதிக்கும் நெய்யில் கையைவிட்டு பணியாரம் சுட்ட தம்பதி.
26.04.06.
திருவில்லிபுத்தூர் கோயில் திருவிழாவில் கணவன், மனைவி இருவரும் கொதிக்கும் நெய்யில் பணியாரம் சுட்டனர். இதைக் காண ஏராளமானோர் திரண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் முத்து இருளாயி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருவிழா நடைபெறும். கோயிலின் முக்கிய நிகழ்ச்சியாக சாமியாடியும், அவரது மனைவியும் கொதிக்கும் நெய்யில் கைகளை விட்டு குழிப்பணியாரம் சுடும் நிகழ்ச்சி நடைபெறும்...
(மேலும்) 

பொப் இசை உலகின் 'சூப்பர் ஸ்டார்' மைக்கல் ஜாக்ஸன் மாரடைப்பால் காலமானார்.
26.04.09.

பொப் இசை உலகின் 'சூப்பர் ஸ்டார்' மைக்கல் ஜாக்ஸன் இன்று அதிகாலை 2.26 (அமெரிக்க நேரம்) மணியளவில் லொஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 50. அவரது மரணத்தைப் பொலிஸாரும், ஜாக்ஸன் குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.  தனது இனிய இசையால் உலகையே ஆட்டிப் படைத்தவர் மைக்கல் ஜாக்ஸன். 1958இல் அமெரிக்காவின் இந்தியானாவில் இவர் பிறந்தார். தனது 9வயதிலேயே இசைத்துறையில் கால் பதித்த ஜாக்ஸன், வெற்றிகரமான பாப் பாடகராக மேடைகளைக் கலக்க ஆரம்பித்தார்.

'தி ஜாக்ஸன் 5' எனும் பெயரில் தனி இசைக் குழுவைத் தொடங்கிய ஜாக்ஸன், 1970இல் அந்தக் குழுவின் 'சூப்பர் ஸ்டாரா'கவும்,உலக பொப் இசையின் மிகச் சிறந்த பாடகராகவும் திகழ்ந்தார். அப்போது அவருக்கு வயது 12 மட்டுமே... (மேலும்) 

13வது அரசியல் திருத்தச் சட்டமும், ஐ.ம.சு. முன்னணி அரச அமைச்சர்களும்  அவர்களுடன் சேர்ந்துகொண்டு ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷ  போடும் திருகுதாளங்களும்.
26.06.09.

13ஆவது திருத்த சட்டத்தை வெகுவிரைவில் அமுல்படுத்தப்போகின்றோம், 13ஆவது திருத்த சட்டத்திற்கு மேலே போய் அரசியல் தீர்வு காணப்போகின்றோம், 13ஆவது திருத்த சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வை முன்வைக்க மாட்டோம், 13ஆவது திருத்த சட்டத்தை யார் எதிர்த்தாலும் அதை நடைமுறைப்படுத்துவோம் என்று இப்படி பல தடவை கடந்த மூன்று வருடங்களாக  ஐனாதிபதி பதவியோற்றதிலிருந்து சொல்லிக்கொள்கிறார். அவரின் அமைச்சரவையிலிருக்கும் அமைச்சர்களும் சதாகாலமும் 13ஆவது திருத்த சட்டத்தை அமுலபடுத்துவது  சம்பந்தமாக நாளும் எதாவது ஒரு அறிக்கையை   வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்... (மேலும்)

வணங்காமண்' கப்பலில் வந்த உணவுப் பொருட்கள் சில தினங்களில் வவுனியாவுக்கு கொண்டுவரப்படும்.
25.06.09.
 
சென்னையில் தற்போது தரித்துள்ள "வணங்காமண்' (கப்டன் அலி) கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் இன்னும் சில தினங்களில் வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காக இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் எடுத்து செல்லப்படுமென நேற்று புதன்கிழமை டில்லியில் இலங்கை இந்திய அதிகாரிகளிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
(மேலும்)
 
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு:  -(பகுதி-13  
*இலங்கையின் பொருளாதாரப் பின்னணி.
25.06.09.

ஆங்கிலேயர் கையிலிருந்து 2பிப்ரவரி 1948-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.   1977-இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வரும் வரையில் ஓரளவு பொருளாதாரம் நிலைப்படுத்தப்பட்டு, நல்வாழ்வு நடவடிக்கைகளிலும், சமூக நலக்கொள்கைகளிலும் குறிப்பிடத்தகுந்ததொரு நிலைக்கு முன்னேறியது. மக்கள் நல  அரசுக்குரிய வடிவத்தில் அது இயங்கியது...(மேலும்)

வெளிநாட்டில் உள்ள  500 மில்லியன் டொலருக்கும் மேலான பெரும் பணத்தை  பங்கிடுவதில் புலிகள் இயக்கத் தலைவர்களான  பத்மநாதன், அரிவாசகன் ஆகிய இருவருக்கும் மத்தியில் மோதல்.
25.06.09.
 
ஸ்ரீலங்காவில் புலிகள் இயக்கத்தின் படு தோல்வியைத் தொடர்ந்து வெளிநாடுகளுக்குத் தப்பியோடியிருக்கும் புலிகள் இயக்கத் தலைவர்களும் ஏற்கனவே வெளிநாடுகளில் இயங்கிவரும் புலிகள் இயக்கத் தலைவர்களும் வெளிநாடுகளிலுள்ள பெருந்தொகையான நிதிகளைத் தமக்குள் பிரித்துக் கொள்வதில் தீவிரமாக ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கனடா, பிரான்ஸ், சுவிற்ஸர்லாந்து, இங்கிலாந்து மற்றும் முக்கிய நாடுகளில் புலிகள் இயக்கத்தினரால் இதுகாலவரை சேகரித்து வைக்கப்பட்டுள்ள பல மில்லியன் கணக்கான டொலர் பணத்தொகையை பிரித்துக்கொள்வதில் சர்வதேச நிதிசேகரிப்புக்குப் பொறுப்பாகவிருந்த புலிகள் இயக்கத் தலைவர்களிடையே தற்போது மோதல்கள் ஏற்பட்டுள்ளன...
(மேலும்)


காணாமல்போன மாணவி நேற்று சடலமாக மீட்பு / முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து 100 கிலோ தங்கநகை, 6.5 மில்லியன் ரூபா பணம் மீட்பு - பிரிகேடியர்
 24.06.09
எஹலியகொடையில் காணாமற்போன பாடசாலை மாணவி நேற்று சடலமாக மீட்கப்பட்டார். எல்லாவெல பிட்டகந்த பகுதியைச் சேர்ந்த பியுமி மதூசிக்க எனும் (15) மாணவியே இனந்தெரியாதோரினால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் தலையில் தாக்கப்பட்டு கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்..
(மேலும்)


மகிந்தவை நம்பலாமா?  அறிவுடன்.
24.06.09.

நம்பித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை, அதைத் திணிக்கும் உரிமையும் எவருக்கும் இல்லை, அதே நேரம் நம்புவோரைத் தூற்றும் உரிமையும் “அந்த சிலருக்கு” இல்லை. மனித உரிமை, மண் உரிமை மற்றும் சுயாட்சி உரிமை பற்றிப் பேசுவதெற்கெல்லாம் முன்பாக தன்னைத் தவிர்ந்த இன்னொருவரின் கருத்துக்களையும், உணர்வுகளையும் மதிக்கக் கற்றுக்கொள்வதே அப்பேற்பட்டவர்களின் அடிப்படைத் தேவையாகும்.
நாம் சொல்வதுதான் சரி, அதைத்தான் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கங்கணம் கட்ட ஆரம்பித்துவிட்டால், அதையே அரசியல் ரீதியாக திணிக்க ஆரம்பித்து விட்டால் அங்கே தான் “பாசிசம்” உருவாகிறது. 

"அதைப் பிரபாகரன் செய்த போது பாசிசம் என்றால், மஹிந்த செய்தாலும் பாசிசம் தான், இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை...  (மேலும்)

சிங்கள பேரினவாத அமைப்புக்களால் கேள்விக்குறியாகும் 13 ஆவது திருத்த சட்டம்.
24.06.09.
அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றது. 13 ஆவது திருத்தத்துக்கு மேலதிகமாகச் சென்று இன நெருக்கடிக்கான தீர்வைக் காணப் போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். அதேவேளையில் இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வைத் தேடி வரும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் 13ஆவது திருத்தத்துக்கு மேலதிகமான விடயங்களை உள்ளடக்கிய தீர்வுப் பொதி ஒன்றை தாம் தயாரித்திருப்பதாக அறிவித்திருக்கின்றார்... (மேலும்)

தமிழகத்தில் முதன்முறையாக ஒருவருக்கு 72 ஆண்டு சிறைத் தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு.
24.06.09.  
 
 தூத்துக்குடியில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு 62 ஆண்டு சிறை மற்றும் ஒருவருக்கு 72 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மீளவிட்டான் அருகே உள்ள கக்கன்நகரை சேர்ந்தவர் மாயாஜான். இவர், சென்னையில் பொலிஸ் என்கவுன் டரில் கொல்லப்பட்ட தூத்துக்குடி ஜெயக்குமாரின் நெருங்கிய கூட்டாளி. ஜெயக்குமாரின் வலதுகரமாக மாயாஜான் கக்கன்நகரில் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக மாயாஜானுக்கு சிலருடன் விரோதம் ஏற்பட்டது.. (மேலும்)


"புலிகளை ஆதரிக்கும் நாடுகளுடன் தூதரகத் தொடர்புகள் நிறுத்தப்படும்'
23.06.09.

 தேசத்துக்கு வெளியே "ஈழம்' இராச்சியத்தை உருவாக்குவதற்காக வெளிநாடுகளில் செயற்பட்டுவரும் புலிகள் இயக்கத்தினர் அதற்காக சர்வதேசக் குழுவொன்றை அமைத்திருப்பதாகவும் அந்தக் குழுவில் புலிகள் இயக்கப் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஐரோப்பிய நாடுகள் உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்தவர்களுமான 13பேராசிரியர்கள் அங்கத்துவம் வகிப்பதாகவும் மேலும் மேற்படி தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
 (மேலும்)

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு: முஸ்லிம் தமிழர்கள். (பகுதி-12)
பாவை சந்திரன்.
22.06.09.

முஸ்லிம்கள் இலங்கை முழுவதும் பரவலாக வாழ்கிறார்கள். அதாவது கொழும்பு, குருநாகல், களுத்துறை, புத்தளம், கம்பஹா, அநுராதபுரம், காலே, பொலனறுவை, மாத்தளை, அம்பாந்தோட்டை, மொனறாகலை, கண்டி, கேகாலை, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், வவுணியா, முல்லைத்தீவு பகுதிகளில் 41சதவிகிதம் முதல் 1சதவிகிதம் வரை வாழ்கின்றனர்... (மேலும்)

நாடு கடந்த அரசாங்கம்' என்றால் என்ன?
              -தாயகன்
22.06.09.
நாடு கடந்த அரசாங்கம் என்ற சொல் தற்போது இலங்கை அரசியலிலும் கேட்கத் தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டு நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு   பாதுகாக்கப்பட்டு விட்டதாக இலங்கையரசு அறிவித்துள்ள நிலையிலேயே"  நாடு  தற்போது இந்த "நாடு கடந்த அரசாங்கம்' என்ற சொல் அரசுக்கு புதிய தலையிடியைக் கொடுத்துள்ளது. 

"நாடு கடந்த அரசாங்கம்' என்ற சொற்பதம் குறித்து அறிந்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவாகவே காணப்படுகின்றது. "நாடு கடந்த அரசாங்கம்' என்றால் என்ன? அதன் செயற்பாடுகள் எவை? அந்த நாட்டுக்கான அங்கீகாரம் எப்படிக் கிடைக்கும், அந்த நாட்டின் தலைவர் யார்? என்பது போன்ற பல கேள்விகள் இன்று இலங்கை மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.. (
மேலும்) 


இன்று சர்வதேச அகதிகள் தினம் (20-06-2009).
20.06.09.

*மரணித்துப் போவதையும் விட மனதை வாட்டி வதைக்கும் அவஸ்தை கெட்ட அகதி வாழ்க்கை"
ஒருவன் அல்லது ஒருத்தி அல்லது ஒரு குடும்பம், தத்தமது சொந்த வீட்டிலிருக்கும் வரை அதிதித்துவமே மாறாக அகக்காரணங்களாலோ புறக் காரணங்களாலோ பலவந்தமாகவோ பலவந்தமற்ற முறையிலோ வெளியேறி விடுமிடத்து அத்தகையோர் அகதிகளே. நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்பதுபோல சொந்த இருப்பிடத்தின் அருமை அகதி முகாம்களில் தெரியாதிருக்க முடியாது. சுமார் 280,000 பேர் அகதிகளாக அல்லலுறுகின்றனர் அகதி முகாம்களிலே..  (மேலும்)

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு: யாழ்ப்பாணத் தமிழரும், மலையகத் தமிழரும்!    -பகுதி-11:
20.06.09.

இலங்கையின் மக்கள்தொகை சுமார் இரண்டு கோடியாகும் (2006). சிங்களவர்கள் (74%) மத்திய மற்றும் தென் பகுதிகளில் பரவலாக வசிக்கின்றனர்.  மற்றப் பிரிவுகளாக இலங்கைத் தமிழர் 12.6 சதவிகிதமும், மலையகத் தமிழர் அல்லது இந்திய வம்சாவளியினர் 5.64 சதவிகிதமும், முஸ்லிம்கள் 7.64 சதவிகிதமும், இந்திய முஸ்லிம்கள் 0.2 சதவிகிதமும், மலேசிய நாட்டினர் 0.3 சதவிகிதமும், ஐரோப்பியர் அல்லது கிறிஸ்தவர் 0.3 சதவிகிதமும் இங்கு உள்ளனர். .. (மேலும்)

18.06.2009, ஆம் திகதி வவுனியாவில் நெல்லுக்குளம் பகுதியில் உள்ள மயானத்துக்கு அருகாமையில் பொலிசாரால் சுட்டுக்கொல்லபட்டவர்கள் உண்மையில் விடுதலைப் புலிகளா??
19.06.09.
சிங்கள பொலிசாரால் அல்லது படையினரால் சுட்டுக்கொல்லப் படுகின்ற தமிழர்கள் யாபேரும் விடுதலைப்புலிகளா? விடுதலைப்புலிகள் யாபேரும்  தங்கள் நெற்றிகளில் விடுதலைப்புலிகள் என்று "குறி"போட்டுக்கொண்டா திரிகிறார்கள்?? ஆயுதத்துடன் திரிகின்றவர்கள் எல்லோரும் விடுதலைப்புலிகளா? 20க்கு மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய வவுனியாவில் சுட்டுக்கொல்லபட்ட  விடுதலை புலிகள் வெறும் சறத்துடனும், ஒரு சாதாரண துவிச்சக்கர வண்டியிலுமா திரிந்திருப்பார்கள்? ஏன் இவர்கள் சாதாரண பொதுமக்களாக இருந்திருக்கக்கூடாது? 

யாரையாவது  தமிழர்களை சுட்டுக்கொன்றுவிட்டு எப்படி இவர்களை விடுதலைப்புலிகள் என்று சொல்லுகிறார்கள்? ஏன் இவர்கள் வவுனியாவில் உள்ள மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம்தானே? அல்லது மயானத்துக்கு போனவர்கள் யாரையாவது இறந்தவர்களை எரியூட்டுவதற்கு விறகு அடுக்க போயிருக்கலாம்தானே..
(மேலும்)

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு: வகுப்புக் கலவரங்கள் - (பகுதி-10)
-பாவை சந்திரன்.
18.06.09.
தோட்டங்களில் வேலைசெய்ய சிங்களவர்கள் மறுத்ததால், ஆங்கிலேயர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். எப்படி அமெரிக்காவில் வேலைசெய்ய ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பர்களை அடிமைகளாக அழைத்து வந்தனரோ, அதேபோல தோட்டங்களில் வேலைசெய்ய ஆங்கிலேயருக்குத் தேவையான கூலித் தொழிலாளர்கள் தமிழகத்தில் கிடைத்தனர்.
 
ஏககாலத்தில் இந்தியாவிலும் ஆங்கிலேயர் ஆட்சி நடந்ததால் சென்னை மாகாணத்தின் தென் பகுதியிலிருந்து கூலியாட்களைத் தருவிப்பது இவர்களுக்கு மிகச் சுலபமாயிருந்தது. மேலும் சிங்களவர்களை அடக்கவும் இச்செயலால் முடிந்தது. 1827-இல் மட்டும் இலங்கையில் குடியேறிய இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கை 10,000. 1877-லோ 1,46,000 ஆக உயர்ந்தது. (ஆதாரம்: இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம், ஈழ ஆய்வு நிறுவனம்). இந்தியத் தமிழர்களை மலையகத் தோட்டங்களில் ஈடுபடுத்தும்போது அடைந்த இன்னல்கள் இருக்கிறதே அது சொல்லுந்தரமன்று..
(மேலும்)



>>Previos Entries

  இணையங்கள் 

தமிழ் நூல்
தமிழ் ஓவியம்
தமிழ் குர்ஆன்
தமிழ் ஓசை

அறிவுடன்
அதிரடி மீடியா
அதிரடி
இலக்கு
இலங்கை நெற்
ஈழநாசம்
ஈரஅனல்
முழக்கம்
தேனி
தேனகம்
ரெலோ நீயூஸ்
நெருப்பு

விமர்சனம்
விக்கிபீடியா
வாவி மகள்
எரிமலை
எங்கள் தேசம்
தீபம் நெற்

வெளிச்சம்
நிதர்சனம்
மாலைமலர்
மாலைச்சுடர்
காதலா
கூகிள்

பத்திரிகைகள்

வீரகேசரி
தினக்குரல்
தினமலர்
தினதந்தி
தினபூமி

வானொலிகள்

T.B.C Radio 
T.I.R Radio
B.B.C