|
இலங்கையில் போரை நிறுத்த வாய்ப்பில்லை - டில்லியில் ரணில் தெரிவிப்பு
18.11.2008
இலங்கையில் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், தற்போதுள்ள நிலையில் இலங்கையில் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லை.
அங்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். இதுபற்றி நாங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறி இருக்கிறோம். இந்த பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து பேச நேரம் கேட்டு இருக்கிறேன் என்றார்.
16.11.2008-ஞாயிற்றுக்கிழமை.
கிழக்கு மாகாணத்தில் இனம் தெரியாத ஆயுததாரிகள் மூன்று வகையினர் செயல்படுகிறார்கள்.
16.11.2008
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்கிழப்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் அப்பாவி இளஞர்கள் நாளாந்தம் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் இனம் தெரியாத ஆயுததாரிகள் இப்பொழுது மூன்று பிரிவினர் ஆகிவிட்டனர் பெரிய புலியாகிய பிரபா குழுவினர், அதிலிருந்து பிரிந்த கருணா குழவாகிய மக்கள் விடுதலைப்புலி குழுவினர், பிறகு அதிலும் என்னொரு பிரிவான பிள்ளையான் குழுவாகிய மக்கள் விடுதலைப்புலி, என மூன்று பிரிவினரால் கிழக்கு மாகாண இளஞர்கள் நாளாந்தம் பிணமாகிக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்களை கொல்லும் தமிழ் குழுக்கள் நமது நாட்டில் பெருத்துவிட்டது.
பிரபாகர பயங்கரவாதியின் பாசறையில் வளர்ந்த புலிகளாகிய கருணா, பிள்ளையான் போன்றவர்கள் எப்படி ஐனநாயவாதிகளாக, மனித உரிமைகளை பேனுபவர்களாக பரிணமிக்க முடியும். "பிரபாகர ரௌடி" நம்மட நாட்டில் என்னவகையான தொழில்களை அவர்களுக்கு கற்று கொடுத்தாரோ அதைதானே அவர்களும் செய்வார்கள். ஒரு மனிதன் வாழ்ந்த சூழுநிலை, வாழ்கின்ற சூழ்நிலைதான் அந்த மனிதனை மனிதனாக வாழவைக்கிறது. பயங்கரவாத கூட்டங்களுடன் வாழ்ந்தால் பயங்கரவாதிகளாகதான் பரிணமிக்க முடியும்.
எது எப்படியோ தமிழர்களை தமிழனே அழிக்கிறார்கள், பிரபாகரனும், பொட்டம்மனும் உயிருடன் இருக்கும்வரை தமிழீழம் முழுவதும் பயங்கரவாதம் பெருக்கெடுத்து ஓடுமே தவிர அதை நிறுத்த முடியாது. பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை கருணா, பிள்ளையான் போன்ற பயங்கரவாதிகளும் இன்னும் தோன்றிகொண்டுதான் இருப்பார்கள். ஆகவே முதலில் பிரபாகரனை தமிழீழத்திலிருந்து ஓழிக்கப்படவேண்டும்.
பா..நடேசனார் புலம்புகிறார்! பா.நடேசனார் புலம்புகிறார்! பா.நடேசனார் புலம்புகிறார்!
16.11.2008.
தமிழ் நாட்டிலிருந்து ஜூனியர் விகடன் என்ற புலி ஆதரவு பத்திரிகைக்கு பேட்டியளிக்கும் போதுதான் பா.நடேசன் அவர்கள் இப்படி நிறைய புலம்பியிருக்கிறார். அவர் சொல்லும் பொய்களும், சில உண்மைகளும்....
ஜூனியர் விகடன்- இலங்கைத் தமிழர்களுக்காக திரட்டப்படும் நிதி, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு போய்ச் சேராது என்று சொல்லப்படுவது உண்மையா?
பா.நடேசன் பதில்.- ஐயோ, ஐயோ இது உலகறிந்த உண்மையாகும். போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான புனர்வாழ்வு, அபிவிருத்தி போன்றவற்றுக்காக வெளிநாட்டு அரசுகளும், நிதி அமைப்புக்களும் சிங்கள அரசிடம் கொடுத்த பெருந்தொகைகள் தமிழரிடம் வந்து சேரவில்லை என்பதே கடந்த கால உண்மையாகும். அந்த காசு அவ்வளவையும் சிங்கள அரசு சுருட்டிக்கொண்டது. அந்த காசிலிருந்து ஒரு ரூபாயை கூட எங்களால் சுருட்டிக்கொள்ள முடியவில்லை. இதையிட்டு எங்களுக்கு மிகுந்த வருத்தமாகும்.
ஆழிப்பேரலையால் தமிழீழம் பெரும் இழப்பைச் சந்தித்தபோது ஆழிப்பேரலையால் இதற்கென்று உலக நாடுகள் சிங்கள அரசிடம் பெருந்தொகை வழங்கியிருந்தன. இந்த நிதியில் பெருந்தொகையை சிங்கள அரசு சுருட்டிக்கொண்டது அந்த காசிலிருந்து சிறுதொகையைதான் எங்களால் சுருட்டிகொள்ள முடிந்தது.
நிலமை இப்படியிருக்க தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக திரட்டப்பட்ட நிதியும் மீண்டும் சிங்கள அரசின் கைகளுக்கு போனால் அது போராயுதங்களாக மாறி ஈழத்தமிழர்களை அழிக்கும் என்பதுதான் உண்மை. ஆதனால் அந்த காசு முழுவதையும் எங்கள் தலைவரின் கையில் கொடுத்தால் அந்த காசை கொண்டு தலைவர் அரிசி, புளி, பருப்பு, வெங்காயம், மண்ணெண்ணை, ஆகிய அத்தியாவசிய பொருட்களை வாங்கி தலைவரே நேரடியாக சென்று போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவார் என்பதை நான் உறுதியுடன் சொல்லிகொள்ள விரும்புகிறேன். ( மேலும்)
பூநகரியை கைப்பற்றிய படையினருக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
15.11.2008.
விடுதலைப்புலிகளின் பாரிய தளமான பூநகரி மற்றும் ஏ 32 பாதையை கைப்பற்றிய படையினருக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.அதேவேளை இதற்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
பூநகரியை கைப்பற்றியமை தொடர்பில் அவர் விடுத்த அறிக்கை ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
பட்ஜெட் வாக்கெடுப்பில் அரசு 42 மேலதிக வாக்குளால் வெற்றி.
15.11.2008.
2009ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் 42 மேலதிக வாக்குகளால் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 127 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் பதிவாகியுள்ளன
பதினைந்த வருடங்களின் பின்பு பூனரி படையினர் வசம்.
விடுதலைப்புலிகளின் முக்கியத்தளமாகிய பூநகரி பகுதி மற்றும் ஏ.32 பாதை இன்று காலை படையினர் தம் வசப்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. (12 GW), (10 GR) ஆகிய பிரிவுகளைச் சேரந்த படையணியினர் நேற்றிரவு மேற்கொண்ட பாரிய தாக்குதலையடுத்தே இந்த வெற்றி இலக்கு எட்டப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
பூநகரி -பரந்தன் (B-69) பாதையை ஊடறுத்தே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது
கிழக்கு மாகாண முதலமைசர் பிள்ளையானின் பிரத்தியேக செயலாளர் குமாரசுவாமி நந்தகோபன் இனம் தெரியாத (கருணா குழு புலி அல்லது பிரபா குழு புலி) புலிகளால் சுட்டுக்கொலை.
14.11.2008.
கொழும்பின் புறநகர்ப்பகுதியான அத்துருகிரிய பகுதியில் இன்றுகாலை கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையானின் பிரத்தியேக செயலாளர் ஒருவர் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக பாதுகாப்புப்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில் கார்ச்சாரதியும் கொல்லப்பட்டிருக்கிறார். உள்ளூர் ஊடகங்களின் தகவல்களின்படி கொல்லப்பட்டவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ரகு எனப்படும் குமாரசுவாமி நந்தகோபன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இன்று காலை கொழும்பிற்கு சுமார் 18 கிலோ மீட்டர் கிழக்குப் புறத்தில் அமைந்துள்ள அத்துருகிரிய எனும் பகுதியில் இருவர் கார் ஒன்றினுள் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என்றும், இவர்களில் ஒருவர் கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையானின் செயலாளர் என்றும், மற்றையவர் அவரது வாகனசாரதி என்றும் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தச் சம்பவம் நடந்த இடத்திற்கு முதலமைச்சர் பிள்ளையான் இன்று பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறார். இந்தச் சூட்டுச் சம்பவம் குறித்து அத்துருகிரிய பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் இந்தச் சம்பவம் இன்று கொழும்பின் புறநகர்ப்பகுதியில் இடம்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத குழுவான விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக அழிக்க வேண்டும் என "பிம்ஸ்ரெக்' உச்சிமாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார்.
14.11.2008.
பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளின் காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கைகளால் இலங்கையின் ஜனநாயக வாழ்வுக்கு பாரிய சவால் ஏற்பட்டிருப்பதாகவும் இத்தகைய குழுக்களை இராணுவ ரீதியாக கையாளவேண்டும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லையெனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதேசமயம், பயங்கரவாதிகள் தமது நடவடிக்கைகளை நியாயபூர்வமானதாக்குவதற்கு அடிப்படைக் காரணங்களை பயன்படுத்த முயற்சிப்பதாகவும் அந்த அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டுமென இலங்கை நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன், அரசியல் தீர்வுப் பாதையில் இலங்கை உறுதியாக இருக்கின்றது என்பதை இந்த உன்னத சபையில் உறுதிபடத் தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்)
2002 ஆம் ஆண்டிலிருந்து இவ்வருடம் செப்டெம்பர் வரை மொத்தம் 440 பேர் நிலக்கண்ணிகளால் மரணமடைந்துள்ளனர்.
13.11.2008.
நாடு முழுவதும் 2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 1,56,203 நிலக் கண்ணிகள் கண்டு பிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டிருப்பதாக, தேச நிர்மான மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், இதே காலப்பகுயில் 154 ஆக இருந்த நிலக்கண்ணியால் மரண மடைவோரின் எண்ணிக்கை, 2007இல் 4ஆக குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேசமயம். யாழ்.மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலாக 66,242 நிலக் கண்ணிகள் கண்டு பிடிக்கப்பட்டதுடன், அதற்கடுத்ததாக கிளிநொச்சி மாவட்டத்தில் 30,329 நிலக் கண்ணிகளும், அதற்கடுத்ததாக வவுனியா மாவட்டத்தில் 20,220 நிலக் கண்ணிகள் கண்டு பிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலக் கண்ணிகளை கூடுதலாக அகற்றும் பணிகளை இராணுவம் மேற்கொண்டிருந்ததுடன் எட்டுதன்னார்வ நிறுவனங்களும் இப்பணிகளில் இறங்கியிருந்தன. அதேவேளை 2002 ஆம் ஆண்டிலிருந்து இவ்வருடம் செப்டெம்பர் வரை மொத்தம் 440 பேர் நிலக்கண்ணிகளால் மரணமடைந்துள்ளனர்.
நிலக் கண்ணிகளால் காயமடைந்தோரின் எண்ணிக்கை ஆகக் கூடுதலாக யாழ். மாவட்டத்திலேயே பதிவு செய்யப்பட்டிருப்பதும் அமைச்சு வெளியிட்ட தகவலில் பதிவாயுள்ளது.
கிளிநொச்சி மாவட்டம் ஜெயபுரம், மடம், வன்னேரிக்குளம், அக்கராயன்குளம், பாலயன்குளம், கிராந்தி மற்றும் பலாவி ஆகிய இடங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
13.11.2008.
வடக்கின் பல பகுதிகளை இன்று படையினர் தம் வசமாக்கியுள்ளனர் என இராணுவப்பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார். இன்று கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது :
பாதுகாப்புப் படையினரால் கிளிநொச்சி மாவட்டம் ஜெயபுரம் , மடம், வன்னேரிக்குளம், அக்கராயன்குளம், பாலயன்குளம், கிராந்தி மற்றும் பலாவி ஆகிய இடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் வாலைப்பாடுக்குளம் பகுதியும் இன்று படையினரால் கைப்பற்றப்பட்டது.
இதனூடாகக் கடற்புலிகளின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தக்கூடியதாக உள்ளது. கொக்காவில், செப்பாக்காடு, அக்கராயன்குளம் வடக்கு போன்ற் பகுதிகளில் படையினர் படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். 59ஆம் பிரிவின் படைத்தரப்பு 1, மாங்குளம் படைத்தரப்பு 2, கள்ளிக்குளப் பிரதேசம் போன்ற பகுதிகளிலும் படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதே போன்று பாண்டிருப்புக்குளம், பள்ளிமுனை ஆகிய பிரதேசங்களையும் குமரிமுனை பகுதியின் அரைவாசியையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த நவம்பர் 7 ஆம் திகதி உரல் போன்ற ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கிளேமோர் குண்டுகள் இரண்டு வவுனியாவில் மீட்கப்பட்டன.
ஒக்டோபர் மாதம் முதலாந்திகதி வரை படையணி 4 இன் கீழ் 50,000 பேர் வரை சேர்க்கப்பட்டுள்ளனர். டிசெம்பர் 31 ஆம் திகதி இவர்கள் எல்லா முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவர்.
விடுமுறையில் சென்ற இராணுவ வீரர்கள் மீண்டும் வந்துசேர நவம்பர் 5 ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. இது வரையில் 6173 பேர் மீள சேர்ந்துள்ளனர். 7749பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 1706 பேர் வரை நீதி மன்ற விசாரணயின் பின்னர் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்
தமிழீழ விடுதலை புலிகளின் சார்பாக சென்னையில் சட்டமன்றத்துக்கு முன்பாக கிழ.நெடுமாறன் தலமையில் 120பேர் கலந்துகொண்டு மாபெரும் போராட்டம்.
13.11.2008.
தமிழீழ படுகொலை புலிகளின் ஆதரவாளர் ஒருங்கினைப்புக்குழு தலைவர் கிழ.நெடுமாறன் தலமையில் சென்னையில் சட்டமன்றத்துக்கு முன்பாக மாபெரும் ஆர்பாட்ட பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த பேரணியில் பெருந்தொகையான தமிழின உணர்வாளர்கள் (120பேர்)கலந்துகொண்டு இலங்கையில் நடக்கும்போரை நிறுத்தசொல்லி கத்தினவையாம். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட 120பேரும் தங்களை பொலிசாரால் கைதுசெய்யப்படவேண்டும் என்பதற்காகதான் தடையையும் மீறி ஆர்பாட்டம் செய்து பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
சென்னையில் மட்டும் ஒருகோடிக்கு மேல் தமிழர்கள் இருக்கிறார்கள் ஆனால் 120பேர் மட்டும்தான் தமிழின உணர்வாளர்களாக இருக்கிறார்கள் போல்தெரிகிறது. தமிழ் நாட்டில் உள்ள மீதிப்பேர் தமிழின உணர்வாளர்கள் இல்லைபோல் தெரிகிறது. தமிழ் நாட்டில் நெடுமாறனுக்கு ஆக குறைந்தது 200பேர்கூட ஆதரவாளர்கள் கிடையாது என்பதுதான் உண்மையாகும். தமிழின உணர்வாளராக கலந்துகொண்டவர்களில் எத்தனைபேரை நெடுமாறன் காசு கொடுத்து கூட்டிக்கொண்டு வந்தாரோ தெரியவில்லை. புலிகள் இயக்கம் சார்பாக தமிழ் நாட்டில் 120பேர் கலந்து கொள்வது என்பதெல்லாம் புலிபினாமி ஊடகங்களுக்கு ஓர் பெரியவிடயமாகும். ஆதனால்தான் அனைத்து புலியூடகங்களிலும் இந்த நெடுமாறனின் ஆர்பாட்ட நிகழ்வை பெருசுபடுத்தி பிரசுரித்திருக்கிறார்கள்.
இந்த இந்திய கைக்கூலிகள் கொஞ்சபேர் ஒன்று கூடி கூத்தடித்து ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பதை புலிபினாமி ஊடகங்கள் விளங்கிகொள்ளாதவரை இந்த இந்திய கைக்கூலிகளுக்கு நல்ல வருமானதுடன் கூடிய நல்ல கொண்டாட்டம்தான்.
புலிகள் வெடிபொருட்களை கடத்தவதற்காக அப்பாவி பெண்களை கேடயங்களாக்கி அவர்களின் வாழ்கையை பாழடிக்கிறார்கள்.
12.11.20008.
வவுனியா ஓமந்தை சோதனை சாவடியில் நேற்று சி-4 வெடிப்பொருட்களுடன் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வயதான பெண்மனி ஒருவரை வவுனியா வைத்தியசாலைக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்க வாகனத்தில் அழைத்து வந்தபோதே ஐந்து கிலோகிராம் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர். தம்மிடம் புதுக்குடியிருப்பில் வைத்து ஒருவர் வவுனியாவில் உள்ள ஒருவரிடம் கையளிக்குமாறு கூறியே இந்த பொதியை தந்ததாக குறித்த பெண் படையினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த பெண் உடனடியாக வவுனியா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
புலிகள் எந்தெந்த வகையில் நாசகார செயல்களை செய்ய முடியுமோ அந்த வழிகளிலெல்லாம் பெண்களைக் கூட பகடைக் காய்களாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது கடந்த சிலதினங்களாக இரு பெண்கள் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் உறுதிப்படுத்துவதாக பலரும் விசனம் வெளியிடுகின்றனர்.
தமிழக அரசியல்வாதிகளே! தமிழக நடிகர் - நடிகைகளே! ஈழத்தமிழர்களாகிய நாங்கள் சிலவிடயங்களை உங்களுக்கு தெளிவாக தெளிவுபடுத்த விரும்புகின்றோம்- (பகுதி-2 ) -கி.பாஸ்கரன்
12..11.2008.
விடுதலை புலிகள் நடத்திய படுகொலைகள், விடுதலை புலிகளால் நாளாந்தம் நடத்தபட்டுக் கொண்டிருக்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கு எதிரான படுகொலைகளை, விடுதலை புலிகள் வன்னியில் தமிழர்களை ஆயுத முனையில் அடக்கி, அடிமைபடுத்தி வைத்திருக்கின்ற செயல்களை, அவர்களால் நாளாந்தம் தோற்று விக்கப்படும் பயங்கரவாத செயல்களை, சமூக விரோதசெயல்களை நீங்கள் கண்டிக்காதவரை, கண்டுகொள்ளாதவரை, நீங்கள் விடுதலை புலிகளிடம் இந்த செயல்களை நிறுத்துமாறு எந்தவித கோரிக்கை முன்வைக்காதவரை வெறுமனே இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலைகளை கண்டிப்பதாக நீங்கள் போடும் அரசியல் கூத்துக்களாக இருந்தால் என்ன சினிமா கூத்துக்களாக இருந்தால் என்ன இப்படிபட்ட கூத்துக்கள் ஈழத்தமிழர்கள் எங்கள் பார்வையில் இலங்கை தமிழர்களுக்காக நீங்கள் அனுதாபம் காட்டுவதாகவோ, கரிசனை கொள்வதாகவே நாங்கள் இவற்றை கருதவில்லை. மாறாக புலிகளை காப்பாற்றுவதற்காக புலிகள் கொடுக்கும் பணத்துக்காக நீங்கள் கூத்துப்போடுகிறீர்கள் என்பதுதான் உண்மையாகும்.
ஒரு இனம் வேறோர் இனத்தால் துன்பப்படுகின்றபொழுது, வதைபடுகின்றபொழுது தானாக அந்த இனம் வெகுண்டுழுந்து தன்னுடைய இனத்தை காப்பாற்றுவதற்காக, தன்னுடைய நியாயமான உரிமைகளை நிலைநாட்டுவதற்காக, அரசியல் அதிகாரங்களை நிலைநாட்டுவதற்காக போராடுவது என்பது அந்த இனம் தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக போராடுகின்ற போராட்டமாகும் அல்லது அந்த இனத்தின் உரிமைபோராட்டமாகும்.
ஆனால் ஒரு இனக்குழுவென்று (புலிகள்) தன்னுடைய இனத்தின் (தமிழர்களின்) குரல்வளையை நெரித்து வைத்துக்கொண்டு, சிறையில் ஆயுதமுனையில் அடைத்து வைத்துக்கொண்டு அந்த இனத்தின் பேச்சுரிமையிலிருந்து, கல்வி கற்கும் உரிமையிலிருந்து, கலியாணம் முடிக்கும் உரிமையிலிருந்து, நடமாடும் உரிமையிலிருந்து அந்த இனத்தின் எல்லாவிதமான அடிப்படை உரிமைகளையும் பறித்து வைத்துக்கொண்டு அந்த இனத்துக்கு வேறோர் இனத்திடமிருந்து உரிமை பெற்றுத்தருவதற்காக போராடுவதாக சொல்லிக்கொள்வதும், போராடுவதும் ஒரு பொய்மை வாதமாகும். இதுதான் புலிகளின் நடத்தும் போராட்டமாகும். (மேலும்)
அடிக்குமேல் அடியடித்தால் அம்மியும் நகருமாம் அதேபோல்தான் இன்றைய புலிகளின் நிலைப்பாடும்.
10.11.2008
தமிழீழ விடுதலைப் புலிகள் எப்பொழுதும் போர் நிறுத்தத்திற்கு தயாராகவே இருப்பதாக அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளாருங்கோ.
புலிகள் எப்பொழுதிலிருந்து போரை நிறுத்துவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பது எல்லாரும் அறிந்த விடயம்தானே ஆனால் பாருங்கோ எப்படி போரை நிறுத்துவது என்பதுதான் தெரியாமல் தவிக்கிறார்கள்.
இப்பொழுது புலிகள் உள்ள நிலமையில் இப்படிதான் சொல்லுவார்கள் பிறகு போரை நிறுத்தி அவர்களுக்கு கொஞ்ச குளுக்கோஸ் ஏற்றிவிட்டால் தெம்பாகிவிடுவார்கள். அவர்கள் தெம்பாகிய பின்பு அவர்களின் பிறவிக் குணத்தை காட்டவெளிகிடுவார்கள் என்பது யாவரும் அறிந்ததுதானே. பலமுறை அரசு யுத்த நிறுத்தம் மேற்கொண்ட போதெல்லாம் அவற்றை எல்லாம் தட்டிக்கழித்து கொண்டு போனவர்கள். கடைசியாக Geneva நகரில் நடந்த பேச்சுவார்தையில் கூட தமிழர்களுக்கான அரசியல் தீர்வு திட்டயோசனைகளை கூட இலங்கையரசுடன் கதைப்பதற்கு மறுத்தவர்கள் என்பதை நாம் அறிவோம். இப்பொழுது தோல்வி மேல் தோல்வியடைந்து கொண்டிருக்கிறார்கள் அதனால் அவர்களுக்கு அவசரமாக யுத்த நிறுத்தம் தேவைப்படுகிறது.
புலித்தலமை வன்னியில் உள்ள இளம்வயதினர்கள் கனிசமானபேரை பலிகொடுத்துப்போட்டினம். மிஞ்சியிருக்கும் பிஞ்சு குழந்தைகளை ஆக குறைந்தது 13வயதுக்காவது வளர்த்தெடுக்க புலிதலைவருக்கு கொஞ்ச காலம் தேவைப்படுகிறது. அதனால இப்ப உடனடியாக புலிகளுக்கு போர் நிறுத்தம் ஒன்று தேவையாய்யுள்ளது. அதற்காக போடாத கூத்தக்கள் எல்லாம் போட்டு பார்கீனம் ஒன்றும் நடைமுறைக்கு ஒத்துவருகின்ற மாதிரி தெரியவில்லை.
இன்னும் கொஞ்சநாள் போக தலைவரை முல்லைதீவு மாவட்ட முதலமைச்சராக்கி விடுங்கோ அதுபோதும் என்று கேட்டாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. அல்லது கருணாவுக்கு கிடைத்தது மாதிரியோ, கூத்தமைபினருக்கு கிடைத்தது மாதிரியோ சிங்கள பாராளுமன்றத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் கொடுத்து, ஊதியமும் கொடுத்து, சிங்கள பொலிஸ் பாதுகாப்பும் கொடுத்தால் தலைவர் கிடங்குக்குள் இருப்பதைவிட மிகவும் சந்தோசப்படுவார்.
சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள், யாபேரும் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் பிரபாகரன், பொட்டுடம்மன் போன்றோர் அழிக்கப்படவேண்டும்.
இதற்காகதான் இலங்கை இராணுவத்தினர் இடைநிறுத்தாமல் தொடர்ந்தும் போராடிக்கொண்டு வருகிறார்கள் அதை இடை நிறுத்துவதற்காக தமிழ் நாட்டிலிருக்கும் நெடுமாறன், கோபாலசாமி, திருமாவளவன் போன்ற கூலிகள் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி புலிகளை காப்பாற்ற நினைக்கிறார்கள். பயங்கரவாதம் வெல்லப்போகிறதா நியாயம், நீதி வெல்லப்போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இனம்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இனந்தெரியாத இளம்பெண்ணின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
10.11.2008.
நலலூர் நாயன்மார்கட்டு குளத்திற்கு அருகில் இச்சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டது. பொது மக்கள் கொடுத்த தகவலையடுத்துப் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சுமார் 20 வயது மதிக்கத்தக்க இப்பெண்ணின் சடலம் அடையாளம் காணப்படுவதற்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. யாழ். நீதிமன்ற நீதிபதி இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்
புலிகளினால் பாராளுமன்ற வீதியில் வைக்கப்பட்ட வெடிகுண்டொன்றை பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.
இப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸார் இந்த குண்டை மீட்டனர். இது தொடர்பில் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, மீட்கப்பட்ட குண்டு செயலிழக்க வைக்கப்பட்டது.
இப்பகுதியினூடாக பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் பாராளுமன்றுக்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்
ஒபாமா வெற்றி பெறுவதற்கு இந்து கடவளான அனுமானின் ஆசீர்வாதம் தான் காரணமாம் என அறிவுமேதையான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பிரிஜ் மோகன் பாமா அவர்கள் தெரிவித்துள்ளார்.
08.11.2008.
கடந்த ஜூன் மாதம், ஒபாமா தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தேர்தலில் அவர் வெற்றிபெறுவதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பிரிஜ் மோகன் பாமா அவருக்கு தங்க முலாம் பூசிய அனுமான் சிலையை அனுப்பி வைத்தார். அனுமானின் ஆசியினால்தான் ஒபாமாவுக்கு மாபெரும் வெற்றி கிட்டியதாக பிரிஜ் மோகன் நம்பிக்கை தெரிவித்தார். வெளிநாட்டினர் அளிக்கும் பரிசுகள் பத்து டொலருக்கு மேல் மதிப்பு பெற்றிருந்தால் அமெரிக்க தேர்தல் விதிப்படி அவற்றைப் பெறுவது குற்றமாகும். எனவே இச்சிலை நியூஜெர்ஸியில் உள்ள கோயிலில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது.
ஒபாமா வெற்றிபெற்றுவிட்டதால், பதவியேற்பு விழாவின்போது நேரில் சென்று அவருக்கு அச்சிலையை வழங்கவுள்ளதாக பிரிஜ் மோகன் தெரிவித்தார்.
"பிரிஜ் மோகன் அவர்களே! நீங்கள் எங்கட தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு ஒரு அனுமான் சிலயை அனுப்பிவையுங்கோ அவர் தமிழீழம் அமைப்பதில் வெற்றிபெறுவார்
அதற்கு பதிலாக அவர் உங்களுக்கு பரிசாக கிளைமோர் குண்டு ஒன்றை அனுப்பி வைப்பார்"
தமிழக அரசியல்வாதிகளே! தமிழக நடிகர் - நடிகைகளே! ஈழத்தமிழர்களாகிய நாங்கள் சிலவிடயங்களை உங்களுக்கு தெளிவாக தெளிவுபடுத்த விரும்புகின்றோம் (பகுதி-1 ) -கி.பாஸ்கரன்
30வருடங்களாக ஈழத்தமிழர்களுக்காக தாங்கள் போராடுவதாக கூறிக்கொண்டு புலித்தலமையால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் வரலாற்றையும், இந்த போராட்டத்தின் தன்மையையும் நீங்கள் சரியாக அறிந்துகொண்டு, சரியாக புரிந்துகொண்டு நீங்கள் இலங்கையரசுக்கு எதிராகவும் இலங்கை தமிழர்களுக்கு சார்பாகவும் ஆதரவு தெரிவித்து கொடிபிடிப்பீர்களானால் ஈழத்தமிழன் காப்பாற்ரப்படுவான் அல்லாவிட்டால் இலங்கைத் தமிழர்களுக்கு சார்பாக நீங்கள் ஆதரவு காட்டுவதாக பாசாங்குசெய்து கொண்டு புலிகளுக்கு வக்காளத்து வாங்குவீர்களானால் மிஞ்சியிருக்கும் ஈழத்தமிழனையும் அழிப்பதற்கு நீங்கள் உதவிபுரிபவர்கள் ஆவீர்கள்.
ஈழத்தமிழர்கள் முதலில் விடுதலை புலிகளிடமிருந்துதான் விடுதலையடைய வேண்டும் என்பதில் ஈழத்தமிழர்களாகிய நாம் தெளிவாக இருக்கின்றோம். எங்கள் பிள்ளைகளை, எங்கள் இனத்தை, எங்கள் கலாச்சாரத்தை, எங்கள் கல்வியை, எங்கள் பண்பாடுகளை, எங்கள் சொத்துக்களை, எங்கள் பிரதேசங்களை நாங்கள் முதலில் விடுதலை புலிகளிடம் இருந்துதான் விடுவிக்கவேண்டும் என்பதுதான் உண்மையான ஈழத்தமிழன் ஒவ்வொருவனுடைய ஆசையும் இலச்சியமுமாகும்.
எங்களுடைய மூன்று சந்ததியினரின் வாழ்க்கை புலிப்பயங்கரவாத பாசிசவாதியான பிரபாகரனால் அழிக்கப்பட்டுவிட்டது. ஆகவே எஞ்சியிருக்கும் ஈழத்தமிழ்களையும் அவர்களின் பிள்ளைகளின் வாழ்கையையும் இந்த புலிப்பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாம் முதலில் மீட்டெடுக்கவேண்டும். (மேலும்)
கருணாநிதியார் போன்று கனிமொழியக்காவுக்கும் இருந்தால்போல் இலங்கை தமிழர்கள்மேல் கனிவு பிறந்தது ஏன்?
08.11.2008.
கனிமொழி அக்காவுக்கு இருந்தால்போல் இலங்கை தமிழர்கள்மேல் கனிவு பிறந்திருக்கிறது என்ன சங்கதி என்று தெரியவில்லை? புலிகளின் தம்பியான சிறுத்தையார் கட்சியின் மகிளிர் அணியின் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை வாழ்த்தி பேசுவதற்காக கனிமொழியார் போனவராம், போன இடத்தில் போர் நிறுத்தம் செய்வதற்கு இலங்கை அரசை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று கனிமொழி கனிந்து பேசியிருக்கிறாருங்கோ.
என்ன புதினமோ தெரியவில்லை கொஞ்ச காலமாக தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் இலங்கை தமிழ் மக்களை இலங்கை அரசபடையினர் படுகொலை செய்வதாக அழுகிறார்கள் அதுதான் ஏன்என்று தெரியவில்லை? இலங்கையரசினர் தமிழ் மக்களை படுகொலை செய்கிறார்கள் என்று ஆதங்கம் கொள்பவர்கள் புலிகள் செய்யும் தமிழின படுகொலைகளை பற்றி ஒரு வார்த்தைகூட உதிர்கிறார்கள் இல்லையே ஏன்? புலிகள் தமிழர்களின் உயிரை எடுப்பதற்காக போராடுவதால் அவர்களுக்கு தமிழர்களின் உயிரை எடுப்பதற்கு எல்லா உரிமையும் இருக்கிறதோ! (மேலும்)
கலைஞர் கருணாநிதி விடுதலைப்புலிகளினதும், விடுதலை புலிகளுக்காக தமிழ் நாட்டில் போலியாக கூத்துப்போடும் அரசியல் கட்சிகளினதும் உண்மையான நிலைப்பாட்டை பட்டவர்தனமாக, தெட்டதெளிவாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
05.11.2008.
இலங்கையில் நடைபெறும் தமிழ் இனப் படுகொலை, நாற்பது ஆண்டு கால வரலாற்றுக்குரிய தொடர் நிகழ்ச்சியாகி விட்டது. அதைத் தடுத்து நிறுத்தித் தமிழர்க்கு உரிமை பெற்றுத் தர போர்க்கோலம் பூண்டவர்கள், பகைவர்கள் மீது பாய்ந்திடாமல் சகோதர யுத்தம் நடத்துவதிலேயும் அவற்றில் மாண்டு மடியும் தமது பழைய களத்தளபதிகளுக்கு சமாதிகள் அமைத்திடும் பணியிலேயும் காட்டிய விறுவிறுப்பை இன ஒற்றுமையில் காட்டத் தேவையில்லையென்றே கருதிச் செயல்பட்டு தமது இனம் அறவே செத்து மடிவது குறித்து அக்கறையற்றே இருந்து விட்டனர்.
அதிர்ச்சி தரத் தக்கதும் ஆறாத் துயரம் அடையத் தக்கதுமான நிகழ்வுகள் இலங்கை மண்ணில் நித்தியத் "திருவிழா'க்கள் ஆகி இறுதிக் கட்டமாக அமைந்துள்ள இன்றைய சோக நிலை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்ததே ஆகும்.
இன்றைய நிலைக்கு முடிவு கண்டிட எடுத்திடும் முயற்சி என் ஒருவனால் மட்டுமே முற்றுப் பெறக் கூடியதல்ல! இதை உணர்ந்திருப்போர் கூட நான் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருப்பதால் என்னால் தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்று தவறாக எண்ணுகிறார்கள் அல்லது தவறாகக் கூறுகிறார்கள்.
"இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு, ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக எதுவும் பேசுவோம், எங்களுக்கு வேண்டியது இலங்கையில் தமிழ் ஈழம் தான்' என்கிற அவர்களின் பேச்சும், எழுத்தும் எனக்குப் புரிகிறது.
ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கிடையே அலை மோதும் எதிர் விமர்சனங்களையும் ஓர் அரசு சிந்தித்துச் செயற்பட வேண்டியிருக்கிறதல்லவா? அவற்றை அலட்சியப்படுத்த முடியாதல்லவா? முதலில் அத்தகைய சட்டக் கட்டுப்பாடுகளை உடைக்கும் விதமாகப் பேசுகிறார்கள்.
சட்ட ரீதியாக அதன் மீது நடவடிக்கை எடுத்திட நேர்ந்தால், "கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக் கெதிராக நடந்து கொள்கிறார்' என்று என் மீது "பெரும் பழி' சுமத்துகிறார்கள். சாதனைகள் புரியும் ஆட்சி என்பதற்குச் சான்றாக அமைந்துள்ள அடுக்கடுக்கான திட்டங்களும், அவற்றின் செயற்பாடுகளும் அவை தொடர்பான புள்ளி விபரங்களுமே போதுமானவை என்ற மன நிறைவு எனக்கிருந்தாலும் எனக்கும், என் தலைமையில் உள்ள ஆட்சிக்கும் எப்படியோ ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று தீர்மானித்து எவையெவை சட்ட விரோதமான செயல்களோ அவற்றிலே ஈடுபட்டு தமிழக அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் தந்திரத்தைக் கையாண்டு வருகிறார்கள்.
அமெரிக்காவில் நடந்த ஐனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமா வெற்றியீட்டியதையிட்டு இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச அவர்களும், இலங்கையின் பயங்கரவாத கட்சி தலைவர் வே.பிரபாகரன் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
05.11.20008
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமெரிக்க ஜனதிபதி தேர்தலில் முடிவுகள் குறித்து ஒபாமாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகர் ரொபேர்ட் ஒ பிளேக்கிற்கு தொலைபேசி மூலம் அழப்பை ஏற்படுத்தி இவ் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இலங்கையில் உள்ள தமிழீழ பயங்கரவாத கட்சியின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களும் அமெரிக்க ஐனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமா வெற்றியீட்டிதற்காக வாழ்த்து தெரிவித்துள்ளார்;. ஒபாமாவின் ஐனாதிபதி தேர்தல் வெற்றி சம்பந்தமாக சிறப்பாக அமைக்கப்பட்ட ஓர் பதுங்கு குழியிலிருந்து அவர் கருத்து தெரிவிக்கையில் விடுதலை புலிகள் நடத்தும் தமிழர்களின் உயிரை எடுக்கும் போராட்டத்தை பராக் ஒபாமா ஓர் பயங்கரவாத போராட்டமாக கருதாமல் அமெரிக்காவில் எங்கள் இயக்கத்தினர் மீதுள்ள தடைய நீக்கவேண்டும் எனவும், சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் வன்னி மீதான இராணுவ நடைவடிக்கையை உடனடியாக நிறுத்தி நாங்கள் மீண்டும் ஆயுதங்கள், ஆட்களை சேர்த்து பலமாக நின்று இலங்கையரசுடன் போரிடுவதற்கு கால அவகாசம் வழங்க இலங்கையரசை அமெரிக்கா வற்புறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
புலிகளின் பயங்கரவாத தந்திரோபாயங்கள்.
04.11.2008.
புலிகள் தங்களின் பயங்கரவாத செயல்களை செய்வதற்காக எப்படிபட்ட வகையிலான செயல்களையும் செய்ய தயங்க மாட்டார்கள். தங்களுக்கு பிடிக்காதவர்களை கொலைசெய்ய வேண்டும் என்றால் அவர்களுடன் கொஞ்ச நாள் தங்கியிருந்து சினேகிதம் கொண்டாடிவிட்டு பின்பு அவர்கள் சாப்பிடும் சோற்றுக்குள் நஞ்சை கலந்து அவர்களை மயக்கம் அடையசெய்து விட்டு அவர்களை சுட்டுகொலை செய்துவிட்டுபோவார்கள்.
திங்கள்கிழமை 03.11.2008, சி4 ரக வெடிபொருளை கடத்துவதற்காக, பச்சிளம் பாலகனுடன் மன்னாரில் இருந்த அப்பாவி பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி தங்களுடைய தேவைக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்பெண் வவுனியாவிலிருந்து இரட்டைபெரிய குளம் வழியாக மதவாச்சிநோக்கி பயணம் செய்யும்போது பொலிசார் சோதனையிட்டதில் சி4 ரக வெடிபொருள் 500g, 1டெற்னேற்றர், 1பற்றறி போன்ற பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த பெண் கொண்டுவந்த பிள்ளை இவருடையதுதானா? அல்லது வேறு தாயிடமிருந்து பறிக்கப்பட்டு இந்தபெண்ணிடம் கொடுக்கப்பட்டதா என்பது தெரியாது. ஆனால் இப்படிபட்ட கேடுகெட்ட புலிகளின் செயல்களால் அந்த அப்பாவி பெண்ணும் பச்சிளம் பிள்ளையும் இப்பொழுது சிறையில் வாடுகிறார்கள. (மேலும்)
கனடா வாழ் புலியாதரவாளர்கள் கனேடிய சமூகத்தினரை விழிக்க வைக்கப்போறார்களாம்!!
03.11.2008.
"புலியாதரவாளர்கள் வெளிநாடுகளிலும் வந்திருந்தும் விழிக்காமல் இருக்கிறார்கள் என்றால்போல் தங்களை போல் மற்றைய சமூகத்தினரும் விழிக்காமல் இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள் போல் தெரிகிறது"
தமிழர் தாயக பகுதியான வன்னிப்பகுதியில் புலிகளால் சிறைபிடிக்கவைக்கப்பட்டு நாளாந்தம் இடம்பெயரவைக்கப்பட்டு, அல்லலுறவைக்கபட்டு, மரநிழல்களிலும், காடுகளிலும், வயல்வெளிகளிலும் தங்கவைக்கப்பட்டு, துன்பங்களையும், துயரங்களையும் அந்த மக்கள்மேல் சுமத்தி அந்த மக்களை அழவைத்து அதன் அவலங்களை காட்டும் முகமாக கனடாவில் "விழிப்புணர்வு வாரம்" என்ற ஓர் கவனயீர்பு நிகழ்சி ஒன்றை புலியமைப்பினர்களால் 02.11.20008 முதல் தொடங்கப்பட்டுள்ளது.
கனடாவின் பல்கலாச்சார சமூகத்தினருக்கும், கனடிய அரசாங்கம், கொள்கை வகுப்பாளர்கள், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள், பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்கள் மற்றும் கனடிய ஊடகங்கள் மத்தியலும் எமது மக்களின் இன்னல்களை வெளிப்படுத்தும் முகமாக இந்த வார நிகழ்வுகள் புலிகளால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாம்.
நமது நாட்டில என்ன நடக்கிறது என்பதையோ யாரால் நமது மக்கள் இன்னல்களை எதிர்நோக்குகிறார்கள் என்பதை பற்றியொல்லாம் கனடிய மக்களுக்கோ அல்லது மற்றைய வெளிநாட்டினர்களுக்கோ ஒன்றுமே தெரியாது என்கிற நினைப்பில்தான் புலிகள் இந்த மாதிரியான கவனயீர்ப்பு நிகழ்சி போன்ற சித்து விளையாட்டுக்களை நடத்தகொண்டிருக்கிறார்கள்.
தவளைகள் கிணற்றுக்குள் கிடந்து நினைக்குமாம் இதுதான் உலகம் என்று அதேமாதிரியான வகையினர்தான் வெளிநாடுகளில் வந்திருந்தும் இதுவரை எதுவுமே விளங்காமல் கடந்த இரண்டு சகாப்தகாலங்களாக இப்படிபட்ட நிகழ்சிகளை நடத்திகொண்டிருக்கும் இந்த புலியாதரவாளர்கள். இவர்கள் இப்படிபட்ட நிகழ்சிகளை பலமுறை நடத்தி இதுவரை எந்த வெளிநாட்டு அரசாங்கத்தையோ அல்லது மனிதாபிமான விவகாரங்களுக்காக இயங்கும் எந்த ஒரு வெளிநாட்டு அமைப்பினரையோ விழிக்கவைத்து கவர்ந்து ஈர்த்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மையாகும். வேனும் என்றால் வெளிநாட்டினர் இவர்களின் செயல்பாடுகளை தடைபண்ணுவார்கள் அப்படி நடப்பதற்கான சந்தர்பங்கள்தான் நிறையவுண்டு.
புலிகள் நினைக்கிறார்கள் வெளிநாட்டுகாரர்களும் தங்களைபோன்று ஐந்தறிவு படைத்தவர்கள் என்று. வெளிநாட்டினர் ஆறு அறிவான பகுத்தறிவு உடையவர்கள் அவர்கள் நமது நாட்டில் நடக்கும் எல்லாவற்றையும் அறிவார்கள். வன்னியில் உள்ள மக்களுக்கு தாராளமாக அரசாங்கம் உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகளை அள்ளி வழங்குகிறது. இந்த உதவிகளை திறம்பட செய்கின்ற அரசு, வன்னி மக்கள் அரசகட்டுப்பாட்டுக்க வந்தால் இதைவிட மிகவும் செம்மையாக இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை செய்யக்கூடிய வல்லமை அரசிடம் இருக்கின்றது. ஆனால் புலிகள் அந்த மக்களை எங்கும் வெளியில் செல்லவிடாமல் சிறைபிடித்து வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிநாட்டினர் வடிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
புலியாதரவாளர்கள் தங்களின் பொய் பரப்புரைகளை நிலை நாட்டுவதற்காக தலைகீழாக நின்றால் கூட நடக்கப்போவது ஒன்றுமில்லை என்பதை நாம் புலியாதரவாளர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
நவம்பர் மாத நரபலி திருவிழாமாதம் நரபலிகாரன் பிரபாகரனால் கோலாகலமாக தெடங்கப்பட்டுள்ளது.
01.11.20008.
நவம்பர் மாதம் என்பது நரபலிகார பிரபாகரனுக்கு முக்கிய மாதமாகும். ஏன்என்றால் நரபலிகாரன் பிரபாகரன் தன்னால் நரபலி எடுக்கப்பட்ட உயிர்களின் ஆத்மாக்களை இந்த மாத கடைசி நாளான 27ஆம்திகதி பெட்டை குரலில் கூவியழைத்து அவர்களின் ஆத்மாக்களை அக்கினியில் ஏற்றி ஆடவிட்டு ஆனந்தம் கொள்ளகின்ற மாதமாகும். இந்த மாதம் நரபலிகாரன் நரபலி மாதமாகையால் இந்த மாததெடக்கத்திலேயே பெரும் தொகையான நரபலியொடுப்பு தொடங்கிவிட்டது.
நாகர்கோயில் கடற்பரப்பில் மட்டும் கிட்டதட்ட 18தமிழர்களின் பிள்ளைகள் பலிகொடுக்கப்பட்டுள்ளார்கள். அத்தோடு கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் ஏ32 வீதியில் அமைந்த புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு அரண்களில் வைத்து 10இளம் பெண்பிள்ளைகள் உட்பட 14தமிழ் பிள்ளைகள் நரகாசுரனால் பலிகொடுக்கப்பட்டுள்ளார்கள். நவம்பர் மாதம் தொடக்கத்திலேயே கிட்டதட்ட 40 அப்பாவி உயிர்கள் நரகாசுர பிரபாகரனால் பலி கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாதம் 27ஆம் திகதிக்குள் நரபலிகாரன் பிரபாகரனின் நரபலி நர்தனத்தில் எத்தனை உயிர்கள் பலியாகப்போகின்றது என்பதை நினைக்கையில் குலை நடுங்குகிறது.
கொடிது கொடிது மானிடராய் பிறப்பது கொடிது
அதிலும் பிரபாகர பயங்கரவாத
பிணம்தின்னி கூட்டத்தினரிடையே பிறந்தது மிகவும் கொடிது.
தொண்டன் வைக்கோவின் ஆதங்கம்
26.10.20008.
ம.தி.மு.க.தொன்டன்;- வைக்கோ சாமி அண்ணை இப்படி நீங்க ரென்ஸன் ஆகக்கூடாது உண்மையில் உங்களை இந்த நிலமைக்கு கொண்டுவந்து விட்டதே இந்த அம்மையார் nIயலலிதான் அப்படியிருக்க நீங்கள் கைதானதுக்கு கலைஞர்தான் காரணம் என்று ஏன் அறிக்கைவிடுகிறீர்கள்?
வைகோ:- அது எனக்கு வடிவாக தெரியும் அந்த அம்மையாரை நினைத்துதான் எனக்கு இப்படி ரென்சனாக இருக்கு இந்த அம்மையாரால்தான் முன்பு பொடாசட்டத்தில் சிறைக்குபோனான் சும்மாயிருந்த என்னை கம்யூனிஸ்ட் கட்சிகாரர்களும் இந்த அம்மாவும்தான் உசுப்பிவிட்டு இப்படி பழையபடி சிறைக்கு போகபண்ணி போட்டாங்கள்.
ம.தி.மு.க.தொன்டன்;- அப்ப நீங்க ஏன் அம்மாமேல கோபமாக ஒரு அறிக்கை விடலாம்தானே?
வைகோ:- அம்மாமேல காட்டமா ஒரு அறிக்கை விடவேண்டும் என்றுதான் மனம் துடிக்குது துடிக்குது ஆனா கொஞ்சம்பொறு முதல்ல நான் சிறையிலயிருந்து வெளியில வரவேண்டும் அதற்குபிறகுதான் எதாவது செய்யவேண்டும் ஆனா ஒன்று எனிமேல் இந்த அம்மா பக்கம் தலையைகூட காட்டமாட்டன் இது சத்தியம்
ம.தி.மு.க.தொன்டன்;- இதைமாதிரிதான் கலைஞருடன் நீங்கள் ஒன்றுசேர்ந்த பொழுது சொன்னீங்க?
வைகோ:- அது அப்ப சொன்னது இது இப்பசொல்லுறன்.
ம.தி.மு.க.தொன்டன்;- நீங்க முந்தி பொடாவில் சிறையிலிருக்கும் பொழுது கலைஞர் உங்களை சிறையில் வந்து பார்த்தவர் அப்பொழுது கலைஞரைவிட்டு எனிமேல் போகமாட்டன் என்று கூறினீங்கள் பிறகு கலைஞரை கைவிட்டுவிட்டு அம்மாவிடம் போய் சரணடைந்துவிட்டீங்கள் நீங்க செய்த இந்த பாவம்கள்தான் உங்களைபோட்டு சுத்தி சுத்தி திரும்ப திரும்ப சிறைக்கு அனுப்புது.
ம.தி.மு.க.தொன்டன்;- அண்ணை நான் சொல்லுகிறன் என்று கோவிக்காதீங்க இந்த புலி சனியனோட உறவை முறிச்சு போட்டு நீங்க பேசாம உங்கட பாட்டில அரசியலை நடத்தினால் உங்களுக்கு இந்த தொல்லைகள் எல்லாம் நீங்கிவிடும்தானே?
வைகோ:- அப்ப நான் கட்சி நடத்துவதற்கு நீயா காசு தரப்போறாய்? பிரபாகரன் மூலம் வெளிநாட்டில இருக்கிற சிலோன்காரர்கள் எனக்கு கோடிகோடியாக காசு தந்திருக்கிறாங்கள் அவங்களுக்காக கிழமைக்கு ஒருக்காவென்றாலும் நான் அறிக்கைவிடவேண்டும் என கடுமையான உத்தரவின் பேரில்தான் காசு தந்தவங்கள் நீ என்னை கொல்லப்பார்கிறாய் போல! அவங்கள் பொல்லாத ஆக்கள். நான் இப்ப அவங்களுடைய சகவாசத்தை முறித்தால் தற்கொலை தாக்குதல் மூலம் என்னை சரிகட்டிபோட்டாலும் போடுவாங்கள் நீ என்னோட இப்படி கதைத்தது மாதிரி இதை பற்றிவேறு யாருடனும் கதைகாதை என்ன.
ம.தி.மு.க.தொன்டன்;- சரியுங்க அண்ணை.
'ஐ.நா. ஆ. நா, ஊ. ஏ- வை நோக்கி மாபெரும் பேரணி'
25.10.2008.
உலகம் முழுவதும் வாழும் எனது அன்புக்குரிய தமிழர்களே (மந்தைகளே) ஐ.நா. ஆ.நா ஊ. ஏ வை நோக்கி நீங்கள் அணிதிரண்டு போய் மிஞ்சியிருக்கும் எங்கள் தமிழீழ தனியரசை அங்கீகரிக்க வேண்டும் என கரத்தகோசமிடுமாறு வேண்டுகிறேன்; மகிந்தவின் இனவாத அரசானது எங்கள் பயங்கரவாத அரசுமேல் குண்டுமழை பொழிகிறது. இதை உலகநாடுகள் கைகட்டிப் பார்துக்கொண்டிருக்கிறது. நீங்களாவது ஐ.நா.ஆ. உ, ஊ. ஏ முன்னால்போய் நின்று கைதட்டி உலக நாடுகளை உறக்கத்திலிருந்து எழுப்பி எங்கள் தமிழீழத்தை(பயங்கரவாத) அங்கீகரிக்க வையுங்கள். எனது அடக்கு முறையிலிருக்கும் தமிழ்மக்களை சிங்கள அரசானது விடுதலை செய்ய நினைக்கிறது என்பதை ஐ.நா.ஆ. உ, ஊ. ஏ வுக்கு எடுத்துரையுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ம.த. கூட்டத்தலைவர்
வே.பிரபாகரன்.
"படுகொலை புலிகளின் தாகம் தமிழனின் இரத்தம்"
கோபாலசாமிக்கு அரோகரா!
கோபாலசாமிக்கு அரோகரா!
புலிகளின் கூலிச்சாமிக்கு அரோகரா!
எங்கள் கூக்குரல் சாமிக்கு அரோகரா!
புலிகளின் திருமாவள சாமிக்கு அரோகரா!
சீமான், அமீர் சாமிகளுக்கு அரோகரா!
மு.கண்ணபன் சாமிக்கு அரோகரா....... எல்லோரும் சிறையிலிருந்து திரும்பிவராமல் இருக்கவேண்டும் என்றும் அத்தோடு ராமதாசு, நெடுமாறன் போன்றோரையும் இந்திய அரசு கைதுசெய்யவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கிறோம்.
கலைஞர் கருணாநிதியும் கோபாலசாமியாரை கைகழுவிவிட்டார். ஐயலலிதா அம்மையாரும் அவரை கைகழுவிவிட்டார். எனி பிரபாகரன் கோபாலசாமியாருக்கு தற்கொலை குண்டுதாரியை ஏவிவிடுவதுதான் பாக்கி இருக்கிறது அதனால கோபாலசாமியார் சிறையிலிருந்து வெளிவராமல் கொஞ்ச நாளைக்கு உள்ள இருக்கிறதுதான் சாலச்சிறந்தது.
படுகொலை, படுகொலை, நம் இனம் சொல்வதை கேளீர்
துன்பங்களையும் துயரங்களையும்
சுமந்து கொண்டோம்....
இருந்தனவற்றை எல்லாம் இழந்தோம்
இருப்பதற்கு இடமின்றி இடம்பெயர்ந்தோம்
வீடு வீணாய் வெறிசோடி கிடக்கிறது
வீதியோரங்களில் நாம் இங்கே வீற்றிருக்கிறோம்
விடுதலை விடுதலை என்றார்கள்
தறுதலைகளின் போராட்டம்களினால்
நாம் கண்டதோ படுகொலை, படுகொலைதான்
எழுதியவர்- தறுதலையான்
ஊடகங்களிலிருந்து பொறுக்கி எடுத்தவைகள்....
புலியூடகத்திலிருந்து- ஓரு நாட்டின் இராணுவத்திடம் இருக்க வேண்டிய அத்தனை வசதியும் சாதுரியமும் புத்திசாலித்தனமும் ஆயுத, ஆள் பலமும் புலிகளிடம் உள்ளதாம்.
தமிழனின் பதில்- ஆனால் பாருங்கோ வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒருநேர சாப்பாட்டைதன்னும் கொடுப்பதற்கு வசதியற்று சிறிலங்கா அரசிடம் கையேந்துகின்ற நிலைதான் இன்றைய புலிகளின் நிலையாகும்.
புலியூடகத்திலிருந்து- கொழும்பிலும் கிழக்கினதும் பாதுகாப்புகளை ஆட்டம் காணவைப்பதே புலிகளின் தற்போதைய நோக்கமாம்.
தமிழனின் பதில்- கொழும்பில் வாழும் தமிழர்களும், கிழக்குப்பகுதியில் வாழும் தமிழர்களும் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னியில் வாழும் தமிழர்களை போன்று படாத துன்பங்களையும், துயரங்களையும் அனுபவிக்காமல் வாழ்வது புலிகளுக்கு பிடிக்குமா? பிடிக்கவே பிடிக்காது. அதனால் கிழக்கிலும் கொழும்பிலும் புலிகள் தங்களுடைய பயங்கரவாதசெயல்களை (தற்கொலை தாக்குதல்கள், பேரூந்துகளில் குண்டுவைத்தல்....போன்றன) செய்து அங்கு வாழும் தமிழர்களின் நிம்மதியான வாழ்கைக்கு உலை வைக்கப்போகிறார்கள் என்பதுதான் "கொழும்பிலும் கிழக்கினதும் பாதுகாப்புகளை ஆட்டம் காணவைப்பதாகும்". சிறிலங்காவில் வாழும் தமிழர்கள் எங்குமே நிம்மதியாக இருக்கக்கூடாது என்பதுதானே புலிப்பயங்கரவாதிகளின் அடிப்படைகொள்கையாகும். இதில் என்ன புதிதாக சொல்லவருகிறார்கள்?
|